அண்ணன் வீடு - 1

bookmark

அன்னா தெரியுதில்ல எங்க
அண்ணாச்சி மண்டபங்கள்
மண்டபத்துக்கீழே நான்
மங்கை சிறையிருக்க
மடி கூட்டிக் கல்லெறக்கி
மண்டபங்கள் உண்டு பண்ணி
மண்டபத்துக்கீழே நான்
மயிலாள் சிறையிருந்தேன்
மயிலினும் பாராமே என்னை
அம்பு கொண்டு எய்தாக
கூடை கொண்டு கல்பெறக்கி
கோபுரங்கள் உண்டுபண்ணி
கோபுரத்துக் கீழே நான்
குயிலாள் சிறையிருந்தேன்
குயிலினும் பாராமே என்னைக்
குண்டு போட்டு எய்தாக
ஐந்து மூங்கில் வெட்டி
அடி மூங்கில் வில் விளைத்து
ஐந்து கலசம் வைத்து
அடிக்கலசம் கல்லெழுதி
முடிமன்னர் தாயாருக்கு
முழங்கும் கைலாசம்
கைலாச வாசலிலே

கண்டதெல்லாம் எங்க சனம்
பூலோக வாசலிலே
போனதெல்லாம் எங்க சனம்
பண்ணை பெருத்தா,
பலசோலிக்காரி-என்னைப் பெத்த அம்மா
தேரை நிறுத்துங்க என்னப் பெத்த அம்மா
திருமுகத்தை நான் பார்க்க !
சந்தை கிடந்ததா
என்னைப் பெற்ற அம்மா
சத்திரங்கள் தாத்தாத்தா
உனக்குக் கொட்டேது முழக்கமேது?
கோல வர்ணத் தேரேது?
கல் நெஞ்சுக்காரி வராள்,
நடத்தி விடு பூந்தேரை-நான்
ஏழு கோண மண்டபம் கழித்து-நான்
முத்துமே தந்து
முக்கடலும் போனாலும்
முத்துக் கெட்டவ வாராள்னு-என்னை
சமுத்திரமே தள்ளி விடும்
சீதை பிறந்தவிடம்,
சிறுமதுரை அடிவாரம்
சீதை விடும் கண்ணீரு
சின்னமடி நிறைந்து
திருப்பாற்கடல் நிறைந்து
கன்னி பிறந்தவிடம் ;
காசியின் அடிவாரம்
கன்னி விடும் கண்ணீர்
கப்பல் கடல் நிறைஞ்சு
கடற்கரையே போய்ப் பாய்ஞ்சு
தெற்கே மனை வாங்கி
தென்மதுரைத் தேர் எழுதி
சீரிடும் தாயாரை நான்
தெற்கே அனுப்பி வைத்தே
வடக்கே மலை வாங்கி
வடமதுரைத் தேர் எழுதி
வரிசையிடும் தாயாரை நான்
வடக்கே அனுப்பி வைத்தேன்,
நல்ல துளசியே நான்

நடுக்கரையே நாட்டி வைத்தேன்
நாலு காலப் பூசைக்கு நீ ஒரு
நல்ல மலர் ஆகலியே !
கோபுரம் ஆண்டகுடி நம்ம
குணத்தினால் கெட்ட குடி
மங்களமாய் ஆண்ட குடி நம்ம
மதியிலே கெட்ட குடி
கொத்துச் சரப்பளியாம்
கோதுமை ராக்குடியாம்
கொல்லன் அறியாம உனக்கு
கொக்கி கழண்டதென்ன?
நங்கச் சரப்பளியாம்
தாழம்பூ ராக்குடியாம்
தட்டான் அறியாம உனக்கு
தடுக்கு கழண்டதென்ன?
மூங்கப்புதரிலே நான்
முகங்கழுவப் போகையிலே
மூங்கிலு தூங்கலையே நான்
முகங்கழுவி மேடேற
தாழப்புதரிலே நான்
தலைமுழுகப் போகையிலே
தாழை தூங்கலியே நான்
தலைமுழுகி மேடேற
பழனி மலையோரம்
பனிப்புல்லாப் பொய்கையிலே-நான்
பாவி குளிப்பேனிண்ணு எனக்கும்
பாஷாணத்தை ஊற்றினார்கள்
இலஞ்சிமலைமேலே
இனிப்புல்லாப் பொய்கையிலே
ஏழை குளிப்பேன் என்று எனக்கு
இடிமருந்தைத் தூற்றினார்கள்
அரைச்ச மஞ்சள் கொண்டு நான்
ஆற்றுக்கே போனாலும்
அரும்பாவி வாராளென்று எனக்கு
ஆறும் கலங்கிடுமே
குளிக்க மஞ்சள் கொண்டு நான்
குளத்துக்கே போனாலும்
கொடும்பாவி வாராளென்று