அண்ணன் வீடு - 2

குளமும் கலங்கிடுமே
பூமியைக்கீறி எனக்குப்
புதுப்பானைப் பொங்கலிட்டு
பூமி இளகலியே எனக்குப்
புதுப்பானை பொங்கலியே
நிலத்தைக்கீறி எனக்கு
நிறைப்பானைப் பொங்கலிட்டு
நிலமும் இளகலியே எனக்கு
நிறைபானை பொங்கலியே
சன்னல் எட்டிப் பார்த்தானோ-உனக்கு
சரவிளக்கைக் கொள்யைிட?
மண் எட்டிப் பாத்தானோ-உனக்கு
மணி விளக்கை கொள்ளையிட
ஓடிவந்து காலாற எனக்கு
ஊடே சத்திரமோ?
நடந்து வந்து காலாற-எனக்கு
நடுவே சமுத்திரமோ?
வட்டார வழக்கு : மாளியல்-மாளிகை (பேச்சு) ; கொட்டாரம்-அரண்மனை (மலையாளம்) ; மேவீடு-மாடி.
குறிப்பு : இவள் சாதியில் தாழ்ந்தவளாயினும் இவளுடைய ஆடைகளையும், அழகையும் பார்த்து இவளை உயர்ந்த சாதிகளான பார்ப்பார், வெள்ளாளர் வீட்டுப் பெண்ணோ என்று ஊரார் வியந்து கூறுவார்கள்.
இறந்தவருக்குக் கவலை இல்லை, இருப்பவர்கள் கவலைக்குள்ளானார்கள்.
பளிச்சி-பளிங்கன் மனைவி, காட்டுச் சாதியினர் பாபநாசம் முதல் சிவகிரி வரையிலுள்ள மலைச்சரிவில் சிறு சிறு கூட்டங்களாக இவர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் பேசுவது கொச்சைத் தமிழ். வேட்டையாடித் தின்னும் ஒரு பிரிவினரும், புன்செய்ப் பயிர், காட்டு விவசாயம் முதலியன செய்து வாழும் மற்றோர் பிரிவினரும் இருக்கின்றனர்.
சக்கிலிச்சி-தெலுங்கு பேசுவர். முற்காலத்தில் இவர்கள் தோல் தைக்கும் தொழில் செய்தனர். தற்போது தோட்டிகளாக இருக்கின்றனர். பறச்சி-தமிழ்நாட்டு விவசாயத் தொழிலாளரில் ஒரு பிரிவினர்.
தாய் இறந்துவிட்டதால் இனிப் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும்,கீழ்ச்சாதிப் பெண்களைப் போல் அடிமை வேலை செய்தால் தான் இவளுக்குப் பிழைப்புண்டு என்று இவள் கூறுகிறாள்.
அன்னா-அதோ !
சிறையிருக்க-பிறந்த வீட்டில்தான், பெரியவளான பெண், வெளிவராமல் கலியாணமாகும் வரை இருப்பாள். இதை சிறையிருத்தல் என்பர்.
முதல் அடியில் தாயின் பெருமையைச் சொல்லுகிறாள். பெருத்தா-பெருத்தவள். மூன்றாவது அடியில் தாய் பெருமையுடையவளாக,சிறப்புமிக்க ஆண் மக்களைப் பெற்றும் அவளது சவ அடக்கச் சடங்கை விமரிசையாகத் தன் சகோதரர்கள் செய்யவில்லையென்று குத்திக் காட்டுவதற்காக, தாயாரை, 'சந்தையில் கிடந்தவள்', 'சத்திரம் தூத்துப் பிழைத்தவள்' என்று இழிவாகக் கூறுகிறாள்.
ஆத்தா-சில சாதியில் தாயாரை இவ்வாறு அழைப்பதுண்டு.
தெற்கே அனுப்பி வைத்தேன்-பழந் தமிழர்கள் இறந்தவர் உயிர் தெற்கே சென்று இருப்பதாக நம்பினார்கள். இதனாலேயே உயிர்த்த முன்னோர்களை “தென்புலத்தார்” என்றார் வள்ளுவர். சைவம் பரவிய காலத்தில் கைலாசம் புனித ஸ்தலமாக கருதப்பட்டது. எனவே உயிர்கள், உடலைப் பிரிந்து வடக்கே செல்வதாகவும் கூறப்படுகிறது.
எமதூதுவர், தன் தாயார் உயிரைக் கொள்ளையிட்டதைக் கூறுகிறாள்.
பிறந்த வீட்டிற்கு வருவதிலுள்ள தடைகளையும் குறிப்பிடுகிறாள்.
சேகரித்தவர் : குமாரி P. சொர்ணம்
இடம்: சிவகிரி,நெல்லை.
-----------