அவிநாசி

bookmark

பாடல் 943
 
ராகம் - காபி 
தாளம் - கண்டசாபு (2 1/2) 

தனதானத் தனதான தனதானத் ...... தனதான 


இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப் 

பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே 

குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா 

அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே. 
பாடல் 944 

தந்தத்தத் தானன தானன 
தந்தத்தத் தானன தானன 
தந்தத்தத் தானன தானன ...... தனதான 


பந்தப்பொற் பாரப யோதர 
முந்திற் றாடகை மேகலை 
பண்புற்றுத் தாளொடு மேவிய ...... துகிலோடே 

பண்டெச்சிற் சேரியில் வீதியில் 
கண்டிச்சிச் சாரொடு மேவியெ 
பங்குக்கைக் காசுகொள் வேசியர் ...... பனிநீர்தோய் 

கொந்துச்சிப் பூவணி கோதையர் 
சந்தச்செத் தாமரை வாயினர் 
கும்பிட்டுப் பாணியர் வீணிய ...... ரநுராகங் 

கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு 
மண்டிச்செச் சேயென வானவர் 
கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே 

அந்தத் தொக் காதியு மாதியும் 
வந்திக்கத் தானவர் வாழ்வுறும் 
அண்டத்துப் பாலுற மாமணி ...... யொளிவீசி 

அங்கத்தைப் பாவைசெய் தாமென 
சங்கத்துற் றார்தமி ழோதவு 
வந்துக்கிட் டார்கழு வேறிட ...... வொருகோடிச் 

சந்தச்செக் காளநி சாசரர் 
வெந்துக்கத் தூளிப டாமெழ 
சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத் 

தங்கச்செக் கோலசை சேவக 
கொங்கிற்றொக் காரவி நாசியில் 
தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே. 
பாடல் 945 
ராகம் - முகாரி 
தாளம் - ஆதி 

தனத்த தந்தன தானன தானன 
தனத்த தந்தன தானன தானன 
தனத்த தந்தன தானன தானன ...... தனதான 


மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட 
கறுத்த குஞ்சியு மேநரை யாயிட 
மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை ...... தடுமாறி 

வருத்த முந்தர தாய்மனை யாள்மக 
வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும் 
வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின ...... நகையாட 

எனைக்க டந்திடு பாசமு மேகொடு 
சினத்து வந்தெதிர் சூலமு மேகையி 
லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய ...... முறவேதான் 

இழுக்க வந்திடு தூதர்க ளானவர் 
பிடிக்கு முன்புன தாள்மல ராகிய 
இணைப்ப தந்தர வேமயில் மீதினில் ...... வரவேணும் 

கனத்த செந்தமி ழால்நினை யேதின 
நினைக்க வுந்தரு வாயுன தாரருள் 
கருத்தி ருந்துறை வாயென தாருயிர் ...... துணையாகக் 

கடற்ச லந்தனி லேயொளி சூரனை 
யுடற்ப குந்திரு கூறென வேயது 
கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் ...... விடும்வேலா 

அனத்த னுங்கம லாலய மீதுறை 
திருக்க லந்திடு மாலடி நேடிய 
அரற்க ரும்பொருள் தானுரை கூறிய ...... குமரேசா 

அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர் 
நீனைத்தி னந்தொழு வாரம ராய்புரி 
யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய ...... பெருமாளே.