இரத்னகிரி

பாடல் 565
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற்
கமலத் தியல்மைக் ...... கணினாலே
கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்
கதிர்விட் டெழுமைக் ...... குழலாலே
நயபொற் கலசத் தினைவெற் பினைமிக்
குளநற் பெருசெப் ...... பிணையாலே
நலமற் றறிவற் றுணர்வற் றனனற்
கதியெப் படிபெற் ...... றிடுவேனோ
புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக்
கறமுற் சரமுய்த் ...... தமிழ்வோடும்
பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட்
டொழியப் புகழ்பெற் ...... றிடுவோனே
செயசித் திரமுத் தமிழுற் பவநற்
செபமுற் பொருளுற் ...... றருள்வாழ்வே
சிவதைப் பதிரத் தினவெற் பதனிற்
றிகழ்மெய்க் குமரப் ...... பெருமாளே.
பாடல் 566
ராகம் - மோஹனம்; தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35)
(எடுப்பு) /4/4/4 0
நடை - தகிட தக
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான
சுற்றகப டோ டுபல சூதுவினை யானபல
கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி
சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு ...... துயர்மேவித்
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு ...... பொறியாலே
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை ...... விளையாடித்
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத ...... மருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு ...... எனதாளம்
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் ...... களமீதே
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்
எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு ...... வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
சித்தமலை காமுககு காநமசி வாயனெடு
ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் ...... பெருமாளே.
பாடல் 567
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஆதி (எடுப்பு - 3/4 இடம்)
தத்தனா தானனத் ...... தனதான
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.