கண்ணுக்கு உகந்த கனி

ஊரில் பல இளைஞர்கள் அவளைப் பெண் கேட்டு அவளுடைய பெற்றோர்களிடம் வருகிறார்கள். ஆனால் அவள் ஓர் இளைஞனைக் காதலிக்கிறாள். ஊரையெல்லாம் மறந்து அவனையே நினைத்துக் கொண்டிருக்கும் அவள் நிலையைப் பற்றி அவன் நினைத்துப் பார்க்கவில்லையென்று அவள் குத்திக் காட்டுகிறாள். தெரு வழியே செல்லும் தன் காதலன் காது கேட்க அவள் தனது மன வருத்தத்தை வெளியிடுகிறாள்.
பெண்: மார்க்கத் துண்டு போட்டு
மேக்காம போற சாமி-ஒம்ம
மார்க்கத் துண்டுலயே
மாயப் பொடி மணக்கும்
காய விட்டேன் கரும் புழுதி
கனிய விட்டேன் இனிய பழம்
மேய விட்டேன் என் கோழி
மேலத் தெருச் சாவலோட
ஊர உறவெழந்தேன்
ஒத்தமரம் தோப்பெழந்தேன்
பேரான சிவகிரிய
பிறப்பிலயும் நான் மறந்தேன்
கடல பொரி கடல
கை நெறஞ்சு என்ன செய்ய?
கண்ணுக்கு உகந்த கனி
ஒண்ணு தின்னால் போதாதோ?
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
--------------