காலடி நிழல்

ஒர் ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அந்த ஊரில் உள்ள மக்கள் பாலைவனத்திற்குச் சென்று தூரத்தில் இருக்கும் மலையை பார்த்து நிற்கும்பொழுது நிழல் எங்கு விழுகிறதோ அங்கு பொக்கிஷம் கிடைக்கும் என்ற வதந்தியை நம்பிய அவன், உடனே வியாபாரத்தை விட்டு, பொக்கிஷத்தை தேட அவன் அதிகாலையிலேயே பாலைவனத்திற்கு சென்று அவன் நிழல்விழும் இடத்தில் குழியைத் தோண்டினான்.
பொக்கிஷத்தைப் பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டிருந்தவனது நிழல், மாலைநேரம் வந்ததும் அவனது காலடிக்குள் வந்து விட பொக்கிஷம் கிடைக்காமல் போனதால் ஏமாற்றடைந்த அவன் அழுது புலம்பினான்.
அப்போது அந்த வழியாக வந்த ஜென் துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே , அவனிடம் இப்போது தான் உன் நிழல் பொக்கிஷம் உள்ள இடத்தை சரியாக காட்டுகிறது.
அந்த பொக்கிஷம் வேறு எங்கும் இல்லை உனக்குள் தான் உள்ளது என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.