காவளூர்

bookmark

பாடல் 882
தான தானன தத்தன தந்தன 
தான தானன தத்தன தந்தன 
தான தானன தத்தன தந்தன ...... தனதான 


மானை நேர்விழி யொத்தம டந்தையர் 
பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர் 
வாச மாமலர் கட்டும ரம்பைய ...... ரிருதோளும் 

மார்பு மீதினு முத்துவ டம்புரள் 
காம பூரண பொற்கட கம்பொர 
வாரி நீலவ ளைக்கைபு லம்பிட ...... அநுராகம் 

ஆன நேரில்வி தத்திர யங்களும் 
நாண மாறம யக்கியி யம்பவும் 
ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் ...... உறவாடி 

ஆர வாரந யத்தகு ணங்களில் 
வேளி னூல்களை கற்றவி ளம்பவும் 
ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை ...... யடைவேனோ 

சான கீதுய ரத்தில ருஞ்சிறை 
போன போதுதொ குத்தசி னங்களில் 
தாப சோபமொ ழிப்பஇ லங்கையு ...... மழிவாகத் 

தாரை மானொரு சுக்கிரி பன்பெற 
வாலி வாகுத லத்தில்வி ழுந்திட 
சாத வாளிதொ டுத்தமு குந்தனன் ...... மருகோனே 

கான வேடர்சி றுக்குடி லம்புன 
மீதில் வாழித ணத்திலு றைந்திடு 
காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு ...... மணிமார்பா 

காவு லாவிய பொற்கமு கின்திரள் 
பாளை வீசம லர்த்தட முஞ்செறி 
காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி ...... பெருமாளே.