கீரிப்பிள்ளை

தேவப்பட்டினம் என்றொரு கிராமத்தில் மாரப்பன் என்றொரு குயவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். பல
வருடங்களாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. அதனால் ஒரு கீரிப்பிள்ளையை எடுத்து தன் குழந்தையைப்
போல் வளர்த்து வந்தனர். ஒரு நாள் குயவனின் மனைவி சுந்தரி கருவுற்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
வெகுகாலம் கழித்து பிறந்த முதல் குழந்தை என்பதால் அக்குழந்தை வெகு செல்லமாக வளர்க்கப்பட்டது.
ஒருநாள்
தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு சுந்தரி குளக்கரைக்குச் சென்றாள். செல்லும் முன் தன் கணவனிடம் குழந்தை
தூங்குகிறது அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தையைக் கீரி கடித்துவிடப் போகிறது என்று
கூறிவிட்டுச் சென்றாள். ;குயவனுக்கு திடீர் தாகம் ஏற்பட தண்ணீர் அருந்த சமையலறைக்குள்
நுழைந்தான். அந்த நேரம் பார்த்து ஒரு கரு நாகம் வந்து குழந்தையின் தொட்டிலின்மேல் ஏற ஆரம்பித்தது. அதைப்
பார்த்தக் கீரிப்பிள்ளை அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் குதறிவிட்டது. ;தண்ணீர் குடத்துடன்
வந்த சுந்தரி கீரியின் வாயெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து பதறிப்போனாள். அய்யோ! நம் குழந்தையை
கீரிப்பிள்ளை கடித்து விட்டது என்று தவறாக நினைத்து ஆத்திரத்தில் சுந்தரி அக்கீரியின் மேல் நீர்க்குடத்தை தூக்கிப்
போட்டாள். கீரிப்பிள்ளை அதே இடத்தில் வலி தாங்காமல் செத்தது. சுந்தரி தன் குழந்தைக்கு என்ன
ஆயிற்றோ என்ற பதற்றத்தில் உள்ளே ஓடிச்சென்றுப் பார்த்தாள். ;குழந்தை தொட்டிலில் உறங்கிக்
கொண்டு இருந்தது. பிறகு என்ன நடந்திருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. தரையில்
பாம்பின் உடல் பல துண்டுகளாக சிதறி இருந்தன. அவளுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது. அடடா!
பாம்பைக் கொன்றுவிட்டு இரத்தத்துடன் இருந்த கீரிப்பிள்ளையைப் பார்த்துக் குழந்தையைத்தான் கடித்து விட்டதோ
என்று தவறாக எண்ணி விட்டேனே. அருமையாக வளர்த்த கீரியைக் அவசரப்பட்டுக் கொன்று விட்டேனே! என்று
கண்ணீர் விட்டுக் கதறினாள். சிறுகணநேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்ச்சிகளை கேட்டு
அறிந்துக் கொண்ட குயவன் தனது மனைவியை சமாதானப்படுத்தினான்.