குளந்தைநகர்

பாடல் 953
தனந்த தானனத் தனதன ...... தனதான
தரங்க வார்குழற் றநுநுதல் ...... விழியாலம்
தகைந்த மாமுலைத் துடியிடை ...... மடமாதர்
பரந்த மாலிருட் படுகுழி ...... வசமாகிப்
பயந்து காலனுக் குயிர்கொடு ...... தவியாமல்
வரந்த ராவிடிற் பிறரெவர் ...... தருவாரே
மகிழ்ந்து தோகையிற் புவிவலம் ...... வருவோனே
குரும்பை மாமுலைக் குறமகண் ...... மணவாளா
குளந்தை மாநகர்த் தளியுறை ...... பெருமாளே.