சிரிக்கும் புத்தர்

சிரிக்கும் புத்தர்

bookmark

அமெரிக்காவில் சீன தெருவில் அமைக்கப்பட்டுள்ள செட்டியார் பொம்மை சிலையை அனைவரும் சிரிக்கும் புத்தர் என்று அழைப்பர். உண்மையில் அந்த சிரிக்கும் புத்தர் ஒரு ஜென் துறவி ஆவார். ஆனால் அவர் அப்படி ஒரு ஜென் துறவி என்று சொல்லி பெருமைப்படும் நபர் அல்ல. அவர் எப்பொழுதும் சந்தோசமாக ஒரு மூட்டையில் சாக்லேட், பிஸ்கட், நட்ஸ் போன்றவைகளை நிரப்பிக் கொண்டு வழியில் பார்க்கும் குழந்தைகளுக்குக் கொடுப்பது வழக்கம். 

 அவர் எந்த ஒரு ஜென் பக்தர்களை பார்க்கும் போதும், அவர்களிடம் ஒரு ரூபாய் கொடு என்று கை நீட்டி கேட்பார். ஒரு நாள் அவர் மற்றொரு ஜென் துறவியை பார்த்தார். அப்பொழுது அந்த மற்றொரு ஜென் துறவி இவரிடம் ஜென் வாழ்கையின் முக்கியத்துவம் என்ன? என்று கேட்டார். இவர் உடனே அவர் சுமந்து கொண்டு இருந்த, அந்த மூட்டையை கீழே போட்டு விட்டார். பின்னர் அந்த மற்றொரு ஜென் துறவி மறுமுறை அவரிடம் ஜென்னின் இயல்பு என்ன? என்று கேட்டர். அதற்கு அந்த சிரிக்கும் புத்தரான ஜென் துறவி மீண்டும் அந்த மூட்டையை தன் தோளில் சுமந்து அவர் வழியே அவர் சென்றார்.