சிவபுரம்

bookmark

பாடல் 872
ராகம் - நீலாம்பரி 
தாளம் - அங்கதாளம் (7 1/2) 
(எடுப்பு - 1 தள்ளி) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தனன தந்தன தானன தானன 
தனன தந்தன தானன தானன 
தனன தந்தன தானன தானன ...... தனதான 


மனமெ னும்பொருள் வானறை கால்கனல் 
புனலு டன்புவி கூடிய தோருடல் 
வடிவு கொண்டதி லேபதி மூணெழு ...... வகையாலே 

வருசு கந்துய ராசையி லேயுழல் 
மதியை வென்றுப ராபர ஞானநல் 
வழிபெ றும்படி நாயடி யேனைநி ...... னருள்சேராய் 

செனனி சங்கரி ஆரணி நாரணி 
விமலி யெண்குண பூரணி காரணி 
சிவைப ரம்பரை யாகிய பார்வதி ...... அருள்பாலா 

சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற 
அசுரர் தங்கிளை யானது வேரற 
சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு ...... முருகோனே 

கனக னங்கையி னாலறை தூணிடை 
மனித சிங்கம் தாய்வரை பார்திசை 
கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் ...... முனையாலே 

கதற வென்றுடல் கீணவ னாருயி 
ருதிர முஞ்சித றாதமு தாயுணு 
கமல வுந்திய னாகிய மால்திரு ...... மருகோனே 

தினக ரன்சிலை வேளருள் மாதவர் 
சுரர்க ளிந்திர னாருர காதிபர் 
திசைமு கன்செழு மாமறை யோர்புக ...... ழழகோனே 

திரும டந்தையர் நாலிரு வோர்நிறை 
அகமொ டம்பொனி னாலய நீடிய 
சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக ...... பெருமாளே.