தாலிப் பொன்னிலும் மாப்பொன்னு

தாய் தங்கம் கொடுத்து நகை செய்யச் சொன்னாலும், பொன் வேலை செய்யும் தட்டான் பழக்க வசத்தால் சிறிதளவு பொன் கவர்ந்து கொள்வான் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. ஒரு பெண் வழக்கமாக ஒரு ஆசாரியிடம் நகை செய்யக் கொடுக்கிறாள். ஒவ்வொரு தடவையும் ஒரு காரணம் சொல்லி, கொடுத்த தங்கத்தைவிட எடை குறைவாக ஆசாரி நகை செய்து தருகிறான். மற்ற நகைகளில் சிறிதளவு தங்கம் குறைந்ததைக் கண்டு கோபப்படாத அவளுக்குத் தாலியில் தங்கம் குறைவதைக் கண்டு கோபம் வருகிறது. தாயின் கோபத்தை இக் கும்மி வெளியிடுகிறது.
கம்மலுக்கு அரும்பு வச்சாண்டி
ஆச்சாரியண்ணன், ஆரழகன்
வன்னிய தட்டான் வடிவழகன்
கம்மலிலேயும் கொஞ்சம், கொஞ்சம்
பழுது யிண்ணாண்டி
கொப்புக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க
ஆச்சாரியண்ணன் ஆரழகன்
வன்னிய தட்டான் வடிவழகன்
கொப்பிலேயும் கொஞ்சம் கொஞ்சம்
பழுது யிண்ணாண்டி
காப்புக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க
ஆச்சாரியண்ணன் ஆரழகன்
வன்னிய தட்டான் வடிவழகன்
காப்புலேயும் கொஞ்சம் கொஞ்சம்
பழுது யிண்ணாண்டி தாலிக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க
ஆச்சாரியண்ணன் ஆரழகன்
வன்னிய தட்டான் வடிவழகன்
தாலியிலேயும் கொஞ்சங் கொஞ்சம்
பழுது யிண்ணாண்டி
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: தருமபுரி மாவட்டம்.
-----------