திருக்கழுக்குன்றம்

bookmark

பாடல் 541
தனத்த தத்தம் தத்தன தானன 
தனத்த தத்தம் தத்தன தானன 
தனத்த தத்தம் தத்தன தானன ...... தனதான 

அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில 
தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின் 
அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு ...... கணையாலே 

அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர் 
நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ 
அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ ...... சிலநாள்போய் 

இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன் 
மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட 
லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை ...... முதிர்வாயே 

எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன் 
மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன 
திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு ...... னருள்தாராய் 

புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி 
படச்சி ரித்தண் முப்புர நீறுசெய் 
புகைக்க னற்கண் பெற்றவர் காதலி ...... யருள்பாலா 

புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர 
சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை 
புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் ...... மருகோனே 

திகழ்க்க டப்பம் புட்பம தார்புய 
மறைத்து ருக்கொண் டற்புத மாகிய 
தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை ...... யணைசீலா 

செகத்தி லுச்சம் பெற்றம ராவதி 
யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி 
திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 542 
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - ஆதி-தேசாதி (8) 

தனதனன தான தனதனன தான 
தனதனன தான ...... தனதான 


எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி 
யிலகுமரன் மூவர் ...... முதலானோர் 

இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
யெழுமமிர்த நாறு ...... கனிவாயா 

புழுகொழுகு காழி கவுணியரில் ஞான 
புநிதனென ஏடு ...... தமிழாலே 

புனலிலெதி ரேற சமணர்கழு வேற 
பொருதகவி வீர ...... குருநாதா 

மழுவுழைக பால டமரகத்ரி சூல 
மணிகரவி நோத ...... ரருள்பாலா 

மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை 
வளமைபெற வேசெய் ...... முருகோனே 

கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு 
கதிருலவு வாசல் ...... நிறைவானோர் 

கடலொலிய தான மறைதமிழ்க ளோது 
கதலிவன மேவு ...... பெருமாளே. 
பாடல் 543 
தான தத்த தனந்த தனா தனாதன 
தான தத்த தனந்த தனா தனாதன 
தான தத்த தனந்த தனா தனாதன ...... தனனதான 


ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென 
வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென 
வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென ...... விரகலீலை 

ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென 
வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென 
ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ...... அமுதமாரன் 

ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென 
வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென
ஆர முத்த மணிந்து அளா வளாவென ...... மருவுமாதர் 

ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ 
சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம் 
ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென ...... வகைவராதோ 

மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென 
மேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென 
வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென ...... எதிர்கொள்சூரன் 

மார்பு மொக்க நெரிந்து காணல் காணலென 
பேய்கு திக்க நிணங்கள்ழு ழுவென 
வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென ...... உதிரமாறாய் 

வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென 
மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென 
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென ...... விசைகள்கூற 

வேலெ டுத்து நடந்த திவா கராசல 
வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ் 
வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ ...... குமரவேளே. 
பாடல் 544 
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12) 

தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான 

வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம 
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய 

ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய 
ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே 

காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா 
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை 

ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண 
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே.