தேவனூர்

bookmark

பாடல் 734
ராகம் - நாட்டகுறிஞ்சி 
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12) 

தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த 
தான தான தந்த தந்த ...... தனதான 


ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும் 
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும் 

ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற 
ஆரணாக மங்க டந்த ...... கலையான 

ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி 
யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய் 

யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி 
யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ 

மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க 
வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை 

வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து 
வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய 

சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் 
தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே 

தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு 
தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே. 
பாடல் 735 
ராகம் - வலஜி 
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12) 

தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த 
தான தான தந்த தந்த ...... தனதான 


தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து 
சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச் 

சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று 
தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை 

ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து 
மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும் 

ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும் 
ஆவல தீர என்று நின்று ...... புகழ்வேனோ 

பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க 
பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி 

பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு 
பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே 

சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த
சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே 

தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு 
தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே. 
பாடல் 736 
ராகம் - மாண்ட் 
தாளம் - அங்கதாளம் (7 1/2) 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 

தான தானன தனனா தனதன 
தான தானன தனனா தனதன 
தான தானன தனனா தனதன ...... தந்ததான 


காணொ ணாதது உருவோ டருவது 
பேசொ ணாதது உரையே தரவது 
காணு நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக் 

காய பாசம தனிலே யுறைவது 
மாய மாயுட லறியா வகையது 
காய மானவ ரெதிரே யவரென ...... வந்துபேசிப் 

பேணொ ணாதது வெளியே யொளியது 
மாய னாரய னறியா வகையது 
பேத பேதமொ டுலகாய் வளர்வது ...... விந்துநாதப் 

பேரு மாய்கலை யறிவாய் துரியவ 
தீத மானது வினையேன் முடிதவ 
பேறு மாயருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே 

வீணொ ணாதென அமையா தசுரரை 
நூறி யேயுயிர் நமனீ கொளுவென 
வேல்க டாவிய கரனே யுமைமுலை ...... யுண்டகோவே 

வேத நான்முக மறையோ னொடும்விளை 
யாடி யேகுடு மியிலே கரமொடு 
வீற மோதின மறவா குறவர்கு ...... றிஞ்சியூடே 

சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை 
மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து 
சேர நாடிய திருடா வருடரு ...... கந்தவேளே 

சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ் 
ஞான யோகிக ளுளமே யுறைதரு 
தேவ னூர்வரு குமரா வமரர்கள் ...... தம்பிரானே.