நூல் (திருவருணை) - 2

bookmark

பாடல் 1327 (மதுரை)     
 
தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா

சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே
பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே
கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா
தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே.
பாடல் 1328 (திருவருணை)
மங்களம் - 'ஏறுமயில் ஏறி' 
 
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்ற
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.