நூல் (திருவருணை) - 3

பாடல் 1334 (திருச்செந்தூர்)
வேறொரு பழைய நூலிலிருந்த இதே பாடலின் சற்று மாறுபட்ட அமைப்பு.
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
கன்றிவரு நீல குங்குமப டீர
கஞ்சமலர் மேவு ...... முலைகாட்டி
கங்குல்செறி கேச நின்றுகுலை யாமை
கண்கள்கடை காட்டி ...... விலைகாட்டி
நன்றுபொரு டீது வென்றுவிலை பேசி
நம்பிவிடு மாத ...... ருடனாட்ட
நஞ்சுபுரி தேரை யங்கமது வாக
நைந்துவிடு மெற்கொன் ...... றருள்வாயே
குன்றிமணி போலச் செங்கண்வரி நாகங்
கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய்
கொண்டமயி லேறிக் குன்றிடிய மோதிச்
சென்றவடி வேலைக் ...... கொடுபோர்செய்
மன்றல்கமழ் பூகந் தெங்குதிரள் சோலை
வண்டுபடு வாவி ...... புடைசூழ
மந்திநட மாடுஞ் செந்தில்நகர் மேவும்
அந்தசுர காலப் ...... பெருமாளே.