பயப்படாதே

பயப்படாதே

bookmark

என் மெத்தை தான் என் வீட்டில் மிகவும் பாதுகாப்பான இடம். அன்று, என் வீட்டில் அனைவரும் வெளியே சென்றிருந்தனர். நான் மட்டுமே தனியாக இருந்தேன். இரண்டு தலையணைகளை இருபுறமும் வைத்துக் கொண்டு படுத்திருந்தேன். எந்த கெட்ட எண்ணங்களும் வரக் கூடாது என என்னுள்ளே கூறிக் கொண்டிருந்தேன். அப்போது மனதுக்குள், "அட! நீ பயப்படுற அளவுக்கு முட்டாளா?" என யோசித்துக் கொண்டிருந்தேன்.

"பயப்படாதே..., அவை உன்னை ஒன்றும் செய்யாது" என என்னருகே யாரோ முணுமுணுக்கும் சப்தம் கேட்டது.