பொதுப்பாடல்கள் - 2

பாடல் 1025
ராகம் – பீம்பளாஸ், தாளம் - ஆதி
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
மானபிணி சுற்றி ...... யுடலூடே
சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
தீதுவிளை விக்க ...... வருபோதில்
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
சாகரம தற்கு ...... ளழியாமுன்
தாரணி தனக்கு ளாரண முரைத்த
தாள்தர நினைத்து ...... வரவேணும்
மாதர்மய லுற்று வாடவடி வுற்று
மாமயிலில் நித்தம் ...... வருவோனே
மாலுமய னொப்பி லாதபடி பற்றி
மாலுழலு மற்ற ...... மறையோர்முன்
வேதமொழி வித்தை யோதியறி வித்த
நாதவிறல் மிக்க ...... இகல்வேலா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ...... பெருமாளே.
பாடல் 1026
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற
தோர்தனம சைத்து ...... இளைஞோர்தம்
தோள்வலி மனத்து வாள்வலி யுழக்கு
தோகையர் மயக்கி ...... லுழலாதே
பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி
யோடுநினை பத்தர் ...... பெருவாழ்வே
பாவவினை யற்று னாமநினை புத்தி
பாரிலருள் கைக்கு ...... வரவேணும்
ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி
ஆண்மையுட னிற்கு ...... முருகோனே
ஆதியர னுக்கு வேதமொழி முற்றி
யார்வம்விளை வித்த ...... அறிவோனே
வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு
வேளையென நிற்கும் ...... விறல்வீரா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ...... பெருமாளே.
பாடல் 1027
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
தோதகமி குத்த பூதமருள் பக்க
சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய்
சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று
சோகைபல குட்ட ...... மவைதீரா
வாதமொடு பித்த மூலமுடன் மற்று
மாயபணி சற்று ...... மணுகாதே
வாடுமெனை முத்தி நீடியப தத்தில்
வாழமிக வைத்து ...... அருள்வாயே
காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த
கானககு றத்தி ...... மணவாளா
காசினிய னைத்து மோடியள விட்ட
கால்நெடிய பச்சை ...... மயில்வீரா
வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்
வேதனைத விர்க்கு ...... முருகோனே
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ...... பெருமாளே.
பாடல் 1028
ராகம் – சங்கராபரணம், தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தான தான தானான தானத் ...... தனதான
காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே
நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே
நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
பாடல் 1029
தான தான தானான தானத் ...... தனதான
கூறு மார வேளார வாரக் ...... கடலாலே
கோப மீது மாறாத கானக் ...... குயிலாலே
மாறு போலு மாதாவின் வார்மைப் ...... பகையாலே
மாது போத மாலாகி வாடத் ...... தகுமோதான்
ஏறு தோகை மீதேறி யாலித் ...... திடும்வீரா
ஏழு லோகம் வாழ்வான சேவற் ...... கொடியோனே
சீறு சூரர் நீறாக மோதிப் ...... பொரும்வேலா
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
பாடல் 1030
ராகம் – ஹிந்தோளம், தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தான தான தானான தானத் ...... தனதான
பேர வாவ றாவாய்மை பேசற் ...... கறியாமே
பேதை மாத ராரோடு கூடிப் ...... பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற் ...... றடிநாயேன்
ஆவி சாவி யாகாமல் நீசற் ...... றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க் ...... கெளிவாயா
தோகை யாகு மாரா கிராதக் ...... கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப் ...... பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
பாடல் 1031
தான தான தனத்தம் தான தான தனத்தம்
தான தான தனத்தம் ...... தனதான
காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங்
கான யாழின் மொழிக்கும் ...... பொதுமாதர்
காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங்
காதில் நீடு குழைக்கும் ...... புதிதாய
கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங்
கோவை வாயமு துக்குந் ...... தணியாமல்
கூருவே னொரு வர்க்குந் தேடொ ணாததொ ரர்த்தங்
கூடு மாறொரு சற்றுங் ...... கருதாயோ
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும்
போத தேசிக சக்ரந் ...... தவறாதே
போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண்
போத ஆதர வைக்கும் ...... புயவீரா
சோதி வேலை யெடுத்தன் றோத வேலையில் நிற்குஞ்
சூத தாருவும் வெற்பும் ...... பொருகோவே
சூரர் சேனை யனைத்துந் தூளி யாக நடிக்குந்
தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.
பாடல் 1032
தான தான தனத்தம் தான தான தனத்தம்
தான தான தனத்தம் ...... தனதான
காரு லாவு குழற்குங் கூரிதான விழிக்குங்
காதல் பேணு நுதற்குங் ...... கதிர்போலுங்
காவி சேர்பவ ளத்தின் கோவை வாயித ழுக்குங்
காசு பூணு முலைக்குங் ...... கதிசேரா
நேரிதான இடைக்குஞ் சீத வார நகைக்கும்
நேரிலாத தொடைக்குஞ் ...... சதிபாடும்
நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன்
னேய மோடு துதிக்கும் ...... படிபாராய்
பார மேரு வளைக்கும் பாணி யார்சடை யிற்செம்
பாதி சோம னெருக்கும் ...... புனைவார்தம்
பால காஎன நித்தம் பாடு நாவலர் துக்கம்
பாவ நாச மறுத்தின் ...... பதமீவாய்
சோரிவாரியிடச்சென் றேறி யோடி யழற்கண்
சூல காளி நடிக்கும் ...... படிவேலாற்
சூரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண்
தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.
பாடல் 1033
தானத்த தானத்த தானத்த தானத்த
தானத்த தானத்த ...... தனதான
தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற
தோய்மைக்க ணால்மிக்க ...... நுதலாலே
தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள்
சோர்கைக்கு மால்விற்கு ...... மடவார்தம்
ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க
ஓசைக்கு நேசித்து ...... உழலாதே
ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி
யோதற்கு நீசற்று ...... முணர்வாயே
வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின்
மீதுற்ற பேதைக்கொர் ...... மணவாளா
வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க
வேதத்தி லேநிற்கு ...... மயனாருந்
தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த
சேமத்தி னாமத்தை ...... மொழிவோனே
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.
பாடல் 1034
ராகம் – சுருட்டி, தாளம் - சதுஸ்ர த்ருபுடை - கண்டநடை (20)
நடை- தகதகிட
தானத்த தானத்த தானத்த தானத்த
தானத்த தானத்த ...... தனதான
தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற
தோளுக்கை காலுற்ற ...... குடிலூடே
சொர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு
வேதித்த சூலத்த ...... னணுகாமுன்
கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ
டேபட்டு வீழ்வித்த ...... கொலைவேலா
கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி
கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய்
ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த
ராவிக்கள் மாள்வித்து ...... மடியாதே
ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு
மாம்வித்தை யாமத்தை ...... யருள்வோனே
சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட
தோதக்கண் மானுக்கு ...... மணவாளா
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.
பாடல் 1035
ராகம் – ஸிந்துபைரவி, தாளம் - ஆதி
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ...... தனதான
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
யூருங் கருவழி ...... யொருகோடி
ஓதும் பலகலை கீதஞ் சகலமு
மோரும் படியுன ...... தருள்பாடி
நானுன் திருவடி பேணும் படியிரு
போதுங் கருணையில் ...... மறவாதுன்
நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
நாடும் படியருள் ...... புரிவாயே
கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு
காலங் களுநடை ...... யுடையோனுங்
காருங் கடல்வரை நீருந் தருகயி
லாயன் கழல்தொழு ...... மிமையோரும்
வானிந் திரனெடு மாலும் பிரமனும்
வாழும் படிவிடும் ...... வடிவேலா
மாயம் பலபுரிசூரன் பொடிபட
வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.
பாடல் 1036
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ...... தனதான
தீயும் பவனமு நீருந் தரணியும்
வானுஞ் செறிதரு ...... பசுபாசத்
தேகந் தனைநிலை யேயொன் றிருவினை
தீருந் திறல்வினை ...... யறியாதே
ஓயும் படியறு நூறும் பதினுறழ்
நூறும் பதினிரு ...... பதுநூறும்
ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல
யோகம் புரிவது ...... கிடையாதோ
வேயுங் கணியும்வி ளாவும் படுபுன
மேவுஞ் சிறுமிதன் ...... மணவாளா
மீனம் படுகட லேழுந் தழல்பட
வேதங் கதறிய ...... வொருநாலு
வாயுங் குலகிரிபாலுந் தளைபட
மாகந் தரமதில் ...... மறைசூரன்
மார்புந் துணையுறு தோளுந் துணிபட
வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.
பாடல் 1037
ராகம் – பெஹாக், தாளம் - ஆதி
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ...... தனதான
வாதந் தலைவலி சூலம் பெருவயி
றாகும் பிணியிவை ...... யணுகாதே
மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
வாழுங் கருவழி ...... மருவாதே
ஓதம் பெறுகடல் மோதுந் திரையது
போலும் பிறவியி ...... லுழலாதே
ஓதும் பலஅடி யாருங் கதிபெற
யானுன் கழலிணை ...... பெறுவேனோ
கீதம் புகழிசை நாதங் கனிவொடு
வேதங் கிளர்தர ...... மொழிவார்தம்
கேடின் பெருவலி மாளும் படியவ
ரோடுங் கெழுமுத ...... லுடையோனே
வேதந் தொழுதிரு மாலும் பிரமனு
மேவும் பதமுடை ...... விறல்வீரா
மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட
வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே.
பாடல் 1038
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
ஊனே தானா யோயா நோயா
லூசா டூசற் ...... குடில்பேணா
ஓதா மோதா வாதா காதே
லோகா சாரத் ...... துளம்வேறாய்
நானே நீயாய் நீயே நானாய்
நானா வேதப் ...... பொருளாலும்
நாடா வீடா யீடே றாதே
நாயேன் மாயக் ...... கடவேனோ
வானே காலே தீயே நீரே
பாரே பாருக் ...... குரியோனே
மாயா மானே கோனே மானார்
வாழ்வே கோழிக் ...... கொடியோனே
தேனே தேனீள் கானா றாய்வீழ்
தேசார் சாரற் ...... கிரியோனே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 1039
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சாவா மூவா வேளே போல்வாய்
தாளா வேனுக் ...... கருள்கூருந்
தாதா வேஞா தாவே கோவே
சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரே
போல்வா யீதற் ...... கெனையாள்கொண்
டேயா பாடா வாழ்வோர் பாலே
யான்வீ ணேகத் ...... திடலாமோ
பாவா நாவாய் வாணீ சார்வார்
பாரா வாரத் ...... துரகேசப்
பாய்மீ தேசாய் வார்கா ணாதே
பாதா ளாழத் ...... துறுபாதச்
சேவா மாவூர் கோமான் வாழ்வே
சீமா னேசெச் ...... சையமார்பா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 1040
ராகம் – மலஹரி, தாளம் - ஆதி - 2 களை
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
நாரா லேதோல் நீரா லேயாம்
நானா வாசற் ...... குடிலூடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன்
தாரா ரார்தோ ளீரா றானே
சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலே
தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய்
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
பாவார்வேதத் ...... தயனாரும்
பர்ழு டேவா னூடே பர்ரு
டேயூர் பாதத் ...... தினைநாடாச்
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
சேவூர் வார்பொற் ...... சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 1041
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
மாதா வோடே மாமா னானோர்
மாதோ டேமைத் ...... துனமாரும்
மாறா னார்போ னீள்தீ யூடே
மாயா மோகக் ...... குடில்போடாப்
போதா நீரு டேபோய் மூழ்கா
வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன்
போதா காரா பாராய் சீரார்
போதார் பாதத் ...... தருள்தாராய்
வேதா வோடே மாலா னார்மேல்
வானோர் மேனிப் ...... பயமீள
வேதா னோர்மே லாகா தேயோர்
வேலால் வேதித் ...... திடும்வீரா
தீதார் தீயார் தீயு ட்முள்
சேரா சேதித் ...... திடுவோர்தஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 1042
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
வாராய் பேதாய் கேளாய் நீதாய்
மானார் மோகத் ...... துடனாசை
மாசூ டாடா தூடே பாராய்
மாறா ஞானச் ...... சுடர்தானின்
றாரா யாதே யாராய் பேறாம்
ஆனா வேதப் ...... பொருள்காணென்
றாள்வாய் நீதா னாதா பார்மீ
தார்வே றாள்கைக் ...... குரியார்தாம்
தோரா வானோர் சேனா தாரா
சூரா சாரற் ...... புனமாது
தோள்தோய் தோளீ ராறா மாசூர்
தூளாய் வீழச் ...... சிறுதாரைச்
சீரா வாலே வாளா லேவே
லாலே சேதித் ...... திடும்வீரா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 1043
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய
அரிய மோன மேகோயி ...... லெனமேவி
அசைய வேக்ரியாபீட மிசைபு காம காஞான
அறிவி னாத ராமோத ...... மலர்தூவிச்
சகல வேத னாதீத சகல வாச காதீத
சகல மாக்ரியாதீத ...... சிவரூப
சகல சாத காதீத சகல வாச னாதீத
தனுவை நாடி மாபூசை ...... புரிவேனே
விகட தார சூதான நிகள பாத போதூள
விரக ராக போதார ...... சுரர்கால
விபுத மாலி காநீல முகப டாக மாயூர
விமல வ்யாப காசீல ...... கவிநோத
ககன கூட பாடீர தவள சோபி தாளான
கவன பூத ரர்ருட ...... சதகோடி
களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1044
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அடைப டாது நாடோ றும் இடைவிடாது போம்வாயு
அடைய மீளில் வீடாகு ...... மெனநாடி
அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல்
அவனி மீதி லோயாது ...... தடுமாறும்
உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக
உதறி வாச காதீத ...... அடியூடே
உருகி ஆரியாசார பரம யோகி யாமாறுன்
உபய பாத ராசீக ...... மருள்வாயே
வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது
மகர வாரியோரேழு ...... மமுதாக
மகுட வாள ராநோவ மதிய நோவ வாரீச
வனிதை மேவு தோளாயி ...... ரமுநோவக்
கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலி
புதல்வ கான வேல்வேடர் ...... கொடிகோவே
கனக லோக பூபால சகல லோக ஆதார
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1045
ராகம் - யமுனா கல்யாணி, தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
அமுத பான ம்முல ...... அனல்மூள
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
அரிச தான சோபான ...... மதனாலே
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
மெளிது சால மேலாக ...... வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீத ...... மருள்வாயே
விமலை தோடி மீதொடு யமுனை போல வோரேழு
விபுத மேக மேபோல ...... வுலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
வெகுவி தாமு காகாய ...... பதமோடிக்
கமல யோனி வீடான ககன கோள மீதோடு
கலப நீல மாயூர ...... இளையோனே
கருணை மேக மேதூய கருணை வாரியேயீறில்
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1046
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரிதாயீச
ரமுத ளாவு மாவேச ...... மதுபோல
அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி
னளவு மோடி நீடோ தி ...... நிழலாறித்
துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத
துறவ ரான பேர்யாரு ...... மடலேறத்
துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு
துவளு வேனை யீடேறு ...... நெறிபாராய்
பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான
பவதி யாம ளாவாமை ...... அபிராமி
பரிபு ரார பாதார சரணி சாம ளாகார
பரம யோகி னீமோகி ...... மகமாயி
கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி
கனத னாச லாபார ...... அமுதூறல்
கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1047
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக
இனிய போக வாராழி ...... யதில்மூழ்கி
இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு
மினிய மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ்
சரச மோக மாவேத சரியை யோக்ரியாஞான
சமுக மோத ராபூத ...... முதலான
சகள மோச டாதார முகுள மோநி ராதார
தரணி யோநி ராகார ...... வடிவேயோ
பரத நீல மாயூர வரத நாக கேயூர
பரம யோகி மாதேசி ...... மிகுஞான
பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத
பதும சேக ராவேலை ...... மறவாத
கரத லாவி சாகாச கலக லாத ராபோத
கமுக மூஷி கர்ருட ...... மததாரைக்
கடவுள் தாதை சூழ்போதில் உலக மேழு சூழ்போது
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1048
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
குலைய ஏம னாலேவி ...... விடுகாலன்
கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத
கொடுமை நோய்கொ டேகோலி ...... யெதிராமுன்
பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
பயமு றாமல் வேலேவு ...... மிளையோனே
பழுது றா பாவாண ரெழுதொ ணாத தோள்வீர
பரிவி னோடு தாள்பாட ...... அருள்தாராய்
மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
மடுவி லானை தான்மூல ...... மெனவோடி
வருமு ராரிகோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
வசன மோம றாகேசன் ...... மருகோனே
கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி
கடிய பேயி னோடாடி ...... கருதார்வெங்
கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1049
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது
துரிய மீது சாராது ...... எவராலுந்
தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத
சுகம கோத தீயாகி ...... யொழியாது
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது
பவனம் வீசில் வீழாது ...... சலியாது
பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது
பரம ஞான வீடேது ...... புகல்வாயே
நிருதர் பூமி பாழாக மகர பூமி தநமுள
நிபிட தாரு காபூமி ...... குடியேற
நிகர பார நீகார சிகர மீது வேலேவு
நிருப வேத ஆசாரி...... யனுமாலும்
கருது மாக மாசாரிகனக கார்மு காசாரி
ககன சாரிபூசாரி...... வெகுசாரி
கயிலை நாட காசாரிசகல சாரிவாழ்வான
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1050
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
சுருதி கூறு வாராலு ...... மெதிர்கூறத்
துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக
துரிய மாகி வேறாகி ...... யறிவாகி
நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு
மெனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம்
நிகரில் கால னாரேவ முகரியான தூதாளி
நினைவொ டேகு மோர்நீதி ...... மொழியாதோ
அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி
யமர்செய் வீர ஈராறு ...... புயவேளே
அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்
அரியும் வாழ வானாளு ...... மதிரேகா
கடுவி டாக ளர்ருப நடவி நோத தாடாளர்
கருதி டார்கள் தநமுள ...... முதல்நாடுங்
கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1051
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
நிலவில் மார னேறூதை யசைய வீசு மாராம
நிழலில் மாட மாமாளி ...... கையின்மேலாம்
நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு
நியதி யாக வாயார ...... வயிறார
இலவி லூறு தேனூறல் பருகி யார வாமீறி
யிளகி யேறு பாடீர ...... தனபாரம்
எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு
கினுமு னீப சீர்பாத ...... மறவேனே
குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்
குழைய மாலி காநாக ...... மொடுதாவிக்
குடில கோம ளாகார சடில மோலி மீதேறு
குமர வேட மாதோடு ...... பிரியாது
கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர்
கடக வாரிதூளாக ...... அமராடுங்
கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1052
ராகம் – திலங், தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
மனக பாட பாடீர தனத ராத ராரூப
மதன ராச ராசீப ...... சரகோப
வருண பாத காலோக தருண சோபி தாகார
மகளி ரோடு சீராடி ...... யிதமாடிக்
குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான
குறைய னேனை நாயேனை ...... வினையேனைக்
கொடிய னேனை யொதாத குதலை யேனை நாடாத
குருட னேனை நீயாள்வ ...... தொருநாளே
அநக வாம னாகார முநி ராக மால்தேட
அரிய தாதை தானேவ ...... மதுரேசன்
அரிய சார தாபீட மதனி லேறி யீடேற
அகில நாலு மாராயு ...... மிளையோனே
கனக பாவ னாகார பவள கோம ளாகார
கலப சாம ளாகார ...... மயிலேறுங்
கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1053
ராகம் - பிருந்தாவன சாரங்கா, தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கேர்டுதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.
பாடல் 1054
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு
குடிசை கோழை மாசூறு ...... குழிநீர்மேற்
குமிழி போல நேராகி அழியு மாயை யாதார
குறடு பாறு நாய்கூளி ...... பலகாகம்
பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில்
படியின் மூழ்கி யேபோது ...... தளிர்வீசிப்
பரவு நாட காசார கிரியை யாளர் காணாத
பரம ஞான வீடேது ...... புகல்வாயே
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான
இமய மாது மாசூலி ...... தருபாலா
எழுமை யீறு காணாதர் முநிவ ரோடு வானாடர்
இசைக ளோடு பாராட ...... மகிழ்வோனே
அரவி னோடு மாமேரு மகர வாரிபூலோக
மதிர நாக மோரேழு ...... பொடியாக
அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட
அசுரர் மாள வேலேவு ...... பெருமாளே.
பாடல் 1055
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
தனன தனன தாத்தன ...... தனதான
சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி
தணிகை பொருடி ராப்பகல் ...... தடுமாறுஞ்
சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடு
சரண கமல மேத்திய ...... வழிபாடுற்
றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொ
ரறிவின் வடிவ மாய்ப்புள ...... கிதமாகி
அவச கவச மூச்சற அமரு மமலர் மேற்சில
ரதிப திவிடு பூக்கணை ...... படுமோதான்
விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ
மிடையு மலகில் தேர்ப்படை ...... யொடுசூழும்
விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர்
விசைய னொருவ னாற்பட ...... வொருதூது
திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி
சிறுவ தறுகண் வேட்டுவர் ...... கொடிகோவே
திமிர யுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு
சிகரிதகர வீக்கிய ...... பெருமாளே.