மீன்கள்

குளக்கரையின் கரையோரத்தில் கொக்கு ஒன்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த
மீன்களில் ஒன்று கொக்கிடம் வந்து என்ன கொக்காரே! உமது ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்? என்று
கேட்டது. அதற்கு கொக்கு செம்படவன் ஒருவன் வந்து ஒட்டுமொத்தமாக உங்கள் அனைவரையும் பிடித்துச் செல்லப்
போகிறான் என்றது. இதனைக்கேட்ட அம்மீன் உடனே உள்ளே சென்றுவிட்டது. சில நிமிடம் கழித்து பல மீன்கள்
மேலே வந்து கொக்கின் முன்பு துள்ளியது. அனைத்து மீன்களும் கொக்கிடம் வந்து உதவிக்கேட்டன. அதற்கு கொக்கு
உங்களை இந்த குளத்திலிருந்து வேறு குளத்திற்கு மாற்றிவிட்டால் வேண்டுமானால் நீங்கள் தப்பிக்க முடியும் என்றதும்
மீன்களும் சம்மதித்தது. நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக்
கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது. குளத்திலிருந்த நண்டு
ஒன்றிற்கு தானும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. கொக்கிடம் என்னையும் அவ்விடத்திற்குக்
கொண்டுப் போங்கள் என்று கெஞ்சியது. ஒப்புக்கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.
பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு. தன்
உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. அதனால் கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு
எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு
சென்றால் அவைகளையும் காண்பிப்பேன் என்றது நண்டு.
;ஆஹா! நமக்கு யோகம் அடித்தது என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை
நோக்கிப் பறந்தது. குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால்
கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.
நீதி :பிறர் சொல்லும் யோசனைகள் அனைத்தையும் அப்படியே ஏற்பது நன்றன்று.