மைந்தனில்லை !

bookmark

எட்டறையும் மாளிகையும்
எள்ளளக்கும் சாவடியும்
பத்தறையும் மாளியலும்
பஞ்சாங்கச் சாவடியும்-எனக்குப்
பார்த்தாள மைந்தனில்லை
வட்டாரங் கோட்டை
வளைவுள்ள கோட்டை
கொட்டார நிலங்களெல்லாம்
கொண்டாட மைந்தனில்லை
எட்டுக்கால் மண்டபமாம்
எள்ளளக்கும் சாவடியாம்
எள்ளளக்கும் சாவடிலே
இளம்பசுவைத் தானமிட்டோம் !
பத்துக் கால் மண்டபமாம்
பருப்பளக்கும் சாவடிலே-நாங்க
பால் பசுவைத் தானமிட்டோம்
------