வளத்தாரை இழந்தவள்

bookmark

தந்தை இறந்துபோனார். மகள் அயலூரில் இருந்து வந்திருக்கிறாள். இதுவே அவள் தந்தைவீட்டுக்கு வருவது கடைசி முறையாக இருக்குமோ? இனி எப்பொழுதாவது இவ்வூருக்குப் போக வேண்டுமென்று வாடகை வண்டி பேசச் சொன்னால், கணவனும் பிறரும் என்ன சொல்லுவார்கள்? பெற்றோரை இழந்தபின் பிறந்தவீட்டு ஆசை எதற்கு என்று கேட்க மாட்டார்களா? மதினியாருக்குக் கேட்கட்டும் என்றுதான் மகள் இவ்வாறு ஒப்பாரி சொல்லி அழுகிறாள்.

வண்ண சைக்கிள் வண்டி
வாடவை மோட்டார் வண்டி-நான் பிறந்த
வடமதுரை போறமிண்ணு
வாடவை பேசுமிண்ணா
வழியிலே உள்ளவர்கள்
வளத்தாரே இழந்தவங்க
வாடவைக்கு ஆசை என்ன?
வடமதுரைச் சோலி என்ன?
சின்னச் சைக்கிள் வண்டி
தீருவை மோட்டார் வண்டி
தெருவிலே உள்ளவர்கள்
தேட்டாரை இழந்தோர்க்கு
தென்மதுரைச் சோலி என்ன
தீருவை ஆசை என்ன?

வட்டார வழக்கு : வாடவை-வாடகை ; வளத்தார்-பெற்றார் ; தேட்டார்-பெற்றோர் ; சோலி-மேலை ; தீருவை-வாடகை.
உதவியவர் : நல்லம்மாள்; சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
-------------