விநாயகமலை - பிள்ளையார்பட்டி

பாடல் 584
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - அங்தாளம் (6 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
தனதன தானா தனாதன ...... தனதான
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநம ...... அபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநம ...... ஜகதீச
பரம செர்ருபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம ...... உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய்
இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் ...... முறையோவென்
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு ...... மடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வோலா மகீதர
வனசர ராதார மாகிய ...... பெருமாளே.