விராலிமலை

பாடல் 568
தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன ...... தனதான
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராலும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜநமுத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர ...... குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
பாடல் 569
தானான தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன ...... தனதான
பாதாள மாதி லோக நிகிலமு
மாதார மான மேரு வெனவளர்
பாடீர பார மான முலையினை ...... விலைகூறிப்
பாலோடு பாகு தேனெ னினியசொ
லாலேய நேக மோக மிடுபவர்
பாதாதி கேச மாக வகைவகை ...... கவிபாடும்
வேதாள ஞான கீனன் விதரண
நாதானி லாத பாவி யநிஜவன்
வீணாள்ப டாத போத தவமிலி ...... பசுபாச
வ்யாபார மூடன் யானு முனதிரு
சீர்பாத தூளி யாகி நரகிடை
வீழாம லேசு வாமி திருவருள் ...... புரிவாயே
தூதாள ரோடு காலன் வெருவிட
வேதாமு ராரி யோட அடுபடை
சோராவ லாரி சேனை பொடிபட ...... மறைவேள்விச்
சோமாசி மார்சி வாய நமவென
மாமாய வீர கோர முடனிகல்
சூர்மாள வேலை யேவும் வயலியி ...... லிளையோனே
கூதாள நீப நாக மலர்மிசை
சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகர ...... மடர்சோலை
கூராரல் தேரு நாரை மருவிய
கானாறு பாயு மேரி வயல்பயில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
பாடல் 570
ராகம் - மனோலயம் ; தாளம் - ஆதி - கண்டநடை (20)
(எடுப்பு - அதீதம்)
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனன ...... தனதான
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
ரியாவரு மிராவுபக ...... லடியேனை
இராகமும் விநோதமு முலொபமு டன்மோகமு
மிலானிவ னுமாபுருஷ ...... னெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுரச ...... கலலோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதிய நுபூதிபெற ...... நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாயப ரிபாலஅர ...... நதிசூடி
நிசார குலாதிப திராவண புயாரிட
நிராமய சரோருகர ...... னருள்பாலா
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
வியாதர்கள் விநோதமகள் ...... மணவாளா
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிம லைமீதிலுறை ...... பெருமாளே.
பாடல் 571
ராகம் - தேஷ்; தாளம் - ஆதி - கண்டநடை (20)
(எடுப்பு - அதீதம்)
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனத் ...... தனதான
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
நிராயுத புராரியச் ...... சுதன்வேதா
சுராலய தராதல சராசர பராணிகள்
செர்ருபமி வராதியைக் ...... குறியாமே
துரால்புகழ் பராதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற் ...... றடைவேனோ
இராகவ இராமன்முன் இராவண இராவண
இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென்
றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே
விராகவ சுராதிப பொராதுத விராதடு
விராயண பராயணச் ...... செருவூரா
விராவிய குராவகில் பராரைமு திராவளர்
விராலிம லைராஜதப் ...... பெருமாளே.
பாடல் 572
தனதன தனதன தனன தனதன
தனதன தனதன தனன தனதன
தத்தன தந்ததன தத்தன தந்ததன
--------- 3 முறை --------- ...... தனதான
இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண
முதவிய புகையினி லளவி வகைவகை
கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென
அறலென இசையளி யெனந ளிருளென
நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட
நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும்
இலகிய பிறையென எயினர் சிலையென
விலகிய திலதநு தலும திமுகமும்
உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு ...... முனைவாளும்
இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு
கடுவது மெனநெடி தடுவ கொடியன
இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்தவிழி
தளவன முறுவலு மமுத குமுதமும்
விளைநற வினியமொ ழியுமி னையதென
ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமு
கிடியொடி படவினை செயும்வின் மதகலை
நெடியக வுடியிசை முரலு சுரிமுக
நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய ...... எழில்தோளும்
விதரண மனவித னமதை யருள்வன
சததள மறைமுகி ழதனை நிகர்வன
புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன
இமசல ம்ருகமத களப பரிமள
தமனிய ப்ரபைமிகு தருண புளகித
சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன
விகலித மிருதுள ம்ருதுள நவமணி
முகபட விகடின தனமு முயர்வட
பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள ...... மதியாத
விபரித முடையிடை யிளைஞர் களைபட
அபகட மதுபுரி யரவ சுடிகைய
ரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதிய
நுணியத ளிரெனவு லவிய பரிபுர
அணிநட னபதமு முடைய வடிவினர்
பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர்
விரகினி லெனதுறு மனம துருகிய
பிரமையு மறவுன தருள்கை வரவுயர்
பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ ...... தொருநாளே
தததத தததத ததத தததத
திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு
டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதக
திமிதிமி செககண திமித திகதிக
தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ...... யெனவேதான்
தபலை டமுழவு திமிலை படகம
தபுதச லிகைதவில் முரசு கரடிகை
மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள்
மொகுமொகு மொகுவென அலற விருதுகள்
திகுதிகு திகுவென அலகை குறளிகள்
விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு
சதிர்பெற அதிர்தர உததி சுவறிட
எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட
வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ ...... வெகுகோடி
மதகஜ துரகர தமுமு டையபுவி
யதலமு தல்முடிய இடிய நெடியதொர்
மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிட
இரவியு மதியமு நிலைமை பெறஅடி
பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல்
அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிரு
வயலியி லடிமைய குடிமை யினலற
மயலொடு மலமற அரிய பெரியதி
ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு ...... கவிராலி
மலையுறை குரவந லிறைவ வருகலை
பலதெரி விதரண முருக சரவண
உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய
நிருபவி மலசுக சொருப பரசிவ
குருபர வெளிமுக டுருவ வுயர்தரு
சக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியு
மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை
மருவியெ யருமைய இளமை யுருவொடு
சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு ...... பெருமாளே.
பாடல் 573
தனதான தான தத்த தனதான தான தத்த
தனதான தான தத்த ...... தந்ததான
உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
யுடனாக ஆக மத்து ...... கந்துபேணி
உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
யொழியாது வூதை விட்டி ...... ருந்துநாளும்
தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
தருவார்கள் ஞான வித்தை ...... தஞ்சமாமோ
தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
தருமாகி லாகு மத்தை ...... கண்டிலேனே
குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
குடிமாள மாய விட்டு ...... குந்திபாலர்
குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
குறளாக னூறில் நெட்டை ...... கொண்டஆதி
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
மலைமே லுலாவு சித்த ...... அங்கைவேலா
மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
வளைகூனை யேநி மிர்த்த ...... தம்பிரானே.
பாடல் 574
தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த
தனதனனந் தான தாத்த ...... தனதான
எதிரெதிர்கண் டோ டி யாட்கள் களவதறிந் தாசை பூட்டி
இடறிவிழும் பாழி காட்டு ...... மடமாதர்
இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கி
லிளமைகொடுங் காத லாற்றில் ...... நிலையாத
அதிவிகடம் பீழ லாற்ற அழுகிவிழும் பீற லூத்தை
அடையுமிடஞ் சீலை தீற்று ...... கருவாயில்
அருவிசலம் பாயு மோட்டை அடைவுகெடுந் தூரை பாழ்த்த
அளறிலழுந் தாம லாட்கொ ...... டருள்வாயே
விதுரனெடுந் த்ரோண மேற்று எதிர்பொருமம் பாதி யேற்றி
விரகினெழுந் தோய நூற்று ...... வருமாள
விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் தூத னீற்ற
விஜயனெடும் பாக தீர்த்தன் ...... மருகோனே
மதியணையுஞ் சோலை யார்த்து மதிவளசந் தான கோட்டின்
வழியருளின் பேறு காட்டி ...... யவிராலி
மலைமருவும் பாதி யேற்றி கடிகமழ்சந் தான கோட்டில்
வழியருளின் பேறு காட்டு ...... பெருமாளே.
பாடல் 575
ராகம் - பைரவி ; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தகிட-1 1/2, தகதிமி-2
தந்த தானன தான தனதன
தந்த தானன தான தனதன
தந்த தானன தான தனதன ...... தனதான
ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும் ...... வெருப
அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும்
சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவது ...... சிவயோகம்
தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியது ...... பெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
மண்டு பூதப சாசு பசிகெட ...... மயிடாரி
வன்கண் வீரிபி டாரி ஹரஹர
சங்க ராஎன மேரு கிரிதலை
மண்டு தூளழ வேலை யுருவிய ...... வயலூரா
வெந்த நீறணி வேணி யிருடிகள்
பந்த பாசவி கார பரவச
வென்றி யானச மாதி முறுகுகல் ...... முழைகூடும்
விண்டு மேல்மயி லாட இனியக
ளுண்டு காரளி பாட இதழிபொன்
விஞ்ச வீசுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
பாடல் 576
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன
தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான
கரதல முங்குறி கொண்ட கண்டமும்
விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர்
கனவிய கொண்டைகு லைந்த லைந்திட ...... அதிபாரக்
களபசு கந்தமி குந்த கொங்கைக
ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய்
கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை ...... மிசைவீழா
இரதம ருந்தியு றுங்க ருங்கயல்
பொருதுசி வந்துகு விந்தி டும்படி
யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி ...... லுற்முழ்கி
இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய்
வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய
இளமை கிழம்படு முன்ப தம்பெற ...... வுணர்வேனோ
பரத சிலம்புபு லம்பு மம்பத
வரிமுக எண்கினு டன்கு ரங்கணி
பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி ...... யிடையேபோய்ப்
பகடியி லங்கை கலங்க அம்பொனின்
மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு
படியுந டுங்கவி ழும்ப னம்பழ ...... மெனவாகும்
மருதமு தைந்தமு குந்த னன்புறு
மருககு விந்தும லர்ந்த பங்கய
வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி ...... யவிராலி
மலையில் விளங்கிய கந்த என்றுனை
மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை
வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் ...... பெருமாளே.
பாடல் 577
ராகம் - தோடி; தாளம் - அங்கதாளம் (5 1/2)
(எடுப்பு - 1/2 தள்ளி)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி ...... கழையோனி
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
கணமொ டாடி காயோகி ...... சிவயோகி
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
பரம ஞான வூர்பூத ...... அருளாயோ
சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
துரக கோப மீதோடி ...... வடமேரு
சுழல வேலை தநமுள அழுத ளாவி வாய்பாறி
சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும்
திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
திரளி னோடு பாறோடு ...... கழுகாடச்
செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே.
பாடல் 578
தானாத்தன தான தனதன
தானாத்தன தான தனதன
தானாத்தன தான தனதன ...... தனதான
காமாத்திர மாகி யிளைஞர்கள்
வாழ்நாட்கொடு போகி யழகிய
காதாட்டிய பார இருகுழை ...... யளவோடிக்
கார்போற்றவ ழோதி நிழல்தனி
லார்வாட்கடை யீடு கனகொடு
காலேற்றுவை வேலின் முனைகடை ...... யமதூதர்
ஏமாப்பற மோக வியல்செய்து
நீலோற்பல ஆசில் மலருட
னேராட்டவி நோத மிடும்விழி ...... மடவார்பால்
ஏகாப்பழி பூணு மருளற
நீதோற்றிமு னாளு மடிமையை
யீடேற்றுத லாலுன் வலிமையை ...... மறவேனே
சீமாட்டியு மாய திரிபுரை
காலாக்கினி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுரதிரி ...... புவநேசை
சீகார்த்திகை யாய அறுவகை
மாதாக்கள்கு மார னெனவெகு
சீராட்டொடு பேண வடதிசை ...... கயிலாசக்
கோமாற்குப தேச முபநிட
வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்
கோதாட்டி ஸ்வாமி யெனவரு ...... மிளையோனே
கோடாச்சிவ பூஜை பவுருஷ
மாறாக்கொடை நாளு மருவிய
கோனாட்டுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
பாடல் 579
ராகம் - கரஹரப்ரியா ; தாளம் - சதுஸ்ர்ருபகம் (6)
(எடுப்பு - வீச்சில் 1/2 இடம்)
தனாதனன தான தந்த தனாதனன தான தந்த
தனாதனன தான தந்த ...... தனதான
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
குலாவியவ மேதி ரிந்து ...... புவிமீதே
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
எலாவறுமை தீர அன்று ...... னருள்பேணேன்
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
சுகாதரம தாயொ ழுங்கி ...... லொழுகாமல்
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
கிலாதவுட லாவி நொந்து ...... மடியாமுன்
தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
சொலேழுலக மீனு மம்பை ...... யருள்பாலா
நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
நபோமணி சமான துங்க ...... வடிவேலா
படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
பசேலெனவு மேத ழைந்து ...... தினமேதான்
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது கந்த ...... பெருமாளே.
பாடல் 580
தானா தனான தனத்த தத்தன
தானா தனான தனத்த தத்தன
தானா தனான தனத்த தத்தன ...... தனதான
மாயா செர்ருப முழுச்ச மத்திகள்
ஓயா வுபாய மனப்ப சப்பிகள்
வாணாளை யீரும் விழிக்க டைச்சிகள் ...... முநிவோரும்
மாலாகி வாட நகைத்து ருக்கிகள்
ஏகாச மீது தனத்தி றப்பிகள்
வாரி ரிரீரென் முழுப்பு ரட்டிகள் ...... வெகுமோகம்
ஆயாத வாசை யெழுப்பு மெத்திகள்
ஈயாத போதி லறப்பி ணக்கிகள்
ஆவேச நீருண் மதப்பொ றிச்சிகள் ...... பழிபாவம்
ஆமா றெணாத திருட்டு மட்டைகள்
கோமாள மான குறிக்க ழுத்திகள்
ஆசார வீன விலைத்த னத்திய ...... ருறவாமோ
காயாத பால்நெய் தயிர்க்கு டத்தினை
ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்
காணாத வாறு குடிக்கு மப்பொழு ...... துரலோடே
கார்போலு மேனி தனைப்பி ணித்தொரு
போர்போ லசோதை பிடித்த டித்திட
காதோடு காது கையிற்பி டித்தழு ...... தினிதூதும்
வேயா லநேக விதப்ப சுத்திரள்
சாயாமல் மீள அழைக்கு மச்சுதன்
வீறான மாம னெனப்ப டைத்தருள் ...... வயலூரா
வீணாள் கொடாத படைச்செ ருக்கினில்
சூர்மாள வேலை விடுக்கும் அற்புத
வேலா விராலி மலைத்த லத்துறை ...... பெருமாளே.
பாடல் 581
ராகம் - மாண்ட்; தாளம் - ஆதி
தானான தான தானான தான
தானான தான ...... தனதான
மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார ...... வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு ...... மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு ...... மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச ...... மருள்வாயே
பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக ...... அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை ...... வயலூரா
வேலா விராலி வாழ்வே ச்முக
வேதாள பூத ...... பதிசேயே
வீரா கடோ ர சூராரி யேசெ
வேளே சுரேசர் ...... பெருமாளே.
பாடல் 582
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன ...... தனதான
மேக மெனுங்குழல் சாய்த்திரு கோக னகங்கொடு கோத்தணை
மேல்விழு கின்ற பராக்கினி ...... லுடைசோர
மேகலை யுந்தனி போய்த்தனி யேகர ணங்களு மாய்க்கயல்
வேல்விழி யுங்குவி யாக்குரல் ...... மயில்காடை
கோகில மென்றெழ போய்க்கனி வாயமு துண்டுரு காக்களி
கூரவு டன்பிரி யாக்கல ...... வியின்மூழ்கிக்
கூடிமுயங்கி விடாய்த்திரு பார தனங்களின் மேற்றுயில்
கூரினு மம்புய தாட்டுணை ...... மறவேனே
மோகர துந்துமி யார்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில்
மூவுல குந்தொழு தேத்திட ...... வுறைவோனே
மூதிசை முன்பொரு காற்றட மேருவை யம்பினில் வீழ்த்திய
மோகன சங்கரி வாழ்த்திட ...... மதியாமல்
ஆக மடிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணி
யாமையின் வென்றவ னாற்பிற ...... கிடுதேவர்
ஆதி யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவ
னாளு லகங்குடி யேற்றிய ...... பெருமாளே.
பாடல் 583
தான தனதனன தான தனதனன
தான தனதனன ...... தந்ததான
மோதி யிறுகிவட மேரு வெனவளரு
மோக முலையசைய ...... வந்துகாயம்
மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி
மூட மெனஅறிவு ...... கொண்டதாலே
காதி வருமியம தூதர் கயிறுகொடு
காலி லிறுகஎனை ...... வந்திழாதே
காவ லெனவிரைய வோடி யுனதடிமை
காண வருவதினி ...... யெந்தநாளோ
ஆதி மறையவனு மாலு முயர்சுடலை
யாடு மரனுமிவ ...... ரொன்றதான
ஆயி யமலைதிரி சூலி குமரிமக
மாயி கவுரியுமை ...... தந்தவாழ்வே
சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை
தோய வளர்கிரியி ...... னுந்திநீடு
சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்
தோகை மயிலுலவு ...... தம்பிரானே.