விளையாட்டு - ஐயன் கொம்பு

தரையில் உட்கார்ந்து கால் பெருவிரலைக் கையினால் பிடித்துக் கொண்டு ஒருவன் கேள்வி கேட்பான். மற்றவர்கள் பதில் சொல்லுவார்கள். இப்பாடலுக்குப் பொருள் எதுவும் இல்லை.
கே: இதாரு கொம்பு?
ப: ஐயன் கொம்பு
கே: ஐயன் எங்கே?
ப: பூப்பறிக்கப் போயிட்டான்
கே: பூவெங்கே?
ப: தண்ணியிலே கிடக்கு
கே: தண்ணி எங்கே?
ப: ஆடு மாடு குடிச்சிடுச்சு
கே. ஆடு மாடு எங்கே?
ப: கள்ளன் கொண்டு போயிட்டான்
கே: கள்ளன் எங்கே?
ப: மரத்தில் இருக்கான்
கே: வெட்டவா குத்தவா,
வெண்ணித்தண்ணி ஊத்தவா?
குறிப்பு: குழந்தைகளுக்கு கேள்விகளுக்கு சட், சட்டென்று பதிலளிக்கும் பழக்கத்தை இவ்விளையாட்டு உண்டாக்கும். திடீரென்று கேள்வியும் பதிலும் புதிது, புதிதாகத் தோன்றலாம்.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
-------------