வைத்தீசுரன் கோயில்

bookmark

பாடல் 779
ராகம் - வாசஸ்பதி 
தாளம் - சதுஸ்ர ஜம்பை (7) 

தனத்தன தானத் ...... தனதான 


உரத்துறை போதத் ...... தனியான 

உனைச்சிறி தோதத் ...... தெரியாது 

மரத்துறை போலுற் ...... றடியேனும் 

மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ 

பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே 

பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே 

வரத்துறை நீதர்க் ...... கொருசேயே 

வயித்திய நாதப் ...... பெருமாளே. 
பாடல் 780 
ராகம் - திலங் 
தாளம் - திஸ்ர்ருபகம் (5) 0/3 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 

தத்தன தான தான தத்தன தான தான 
தத்தன தான தான ...... தனதான 


எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி 
யெத்தனை கோடி போன ...... தளவேதோ 

இப்படி மோக போக மிப்படி யாகி யாகி 
யிப்படி யாவ தேது ...... இனிமேலோ 

சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை 
சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் 

சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது 
சித்திர ஞான பாத ...... மருள்வாயே 

நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக 
நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே 

நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு 
நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா 

பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு 
பத்திர பாத நீல ...... மயில்வீரா 

பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே. 
பாடல் 781
தான தத்தனந் தான தத்ததன 
தான தத்தனந் தான தத்ததன 
தான தத்தனந் தான தத்ததன ...... தனதான 


பாட கச்சிலம் போடு செச்சைமணி 
கோவெ னக்கலந் தாடு பொற்சரணர் 
பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி ...... னிடைநூலார் 

பார பொற்றனங் கோபு ரச்சிகர 
மாமெ னப்படர்ந் தேம லிப்பரித 
மாகு நற்கரும் போடு சர்க்கரையின் ...... மொழிமாதர் 

ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ 
டாட ளிக்குலம் பாட நற்றெருவி 
லேகி புட்குலம் போல பற்பலசொ ...... லிசைபாடி 

ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம் 
வாரு முற்பணந் தாரு மிட்டமென 
ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் ...... செயலாமோ 

சேட னுக்கசண் டாள ரக்கர்குல 
மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள் 
சேர வற்றநின் றாட யிற்கரமி ...... ரறுதோள்மேல் 

சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி 
யோர்கள் கட்டியம் பாட எட்டரசர் 
சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி ...... புகழ்வேலா 

நாட கப்புனங் காவ லுற்றசுக 
மோக னத்திமென் தோளி சித்ரவளி 
நாய கிக்கிதம் பாடி நித்தமணி ...... புனைவோனே 

ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல் 
நாய கிக்குநன் பாக ரக்கணியும் 
நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் ...... பெருமாளே. 
பாடல் 782 
ராகம் - மனோலயம் (மத்யம ஸ்ருதி) 
தாளம் - ஆதி - 2 களை (திஸ்ரநடை) (24) 

தான தான தத்த தந்த தான தான தத்த தந்த 
தான தான தத்த தந்த ...... தனதான 


மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி 
மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய 

மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி 
வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல் 

வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன் 
வீடு தாப ரித்த அன்பர் ...... கண்முடே 

மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த 
வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே 

காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட 
கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே 

காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த 
காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா 

சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து 
சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே 

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த 
சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே. 
பாடல் 783 
தானா தானன தாத்த தந்தன 
தானா தானன தாத்த தந்தன 
தானா தானன தாத்த தந்தன ...... தனதானா 


முலா தாரமொ டேற்றி யங்கியை 
ஆறா தாரமொ டோட்டி யந்திர 
மூலா வாயுவை யேற்று நன்சுழி ...... முனையூடே 

மூதா தாரம ரூப்பி லந்தர 
நாதா கீதம தார்த்தி டும்பர 
மூடே பாலொளி ஆத்து மந்தனை ...... விலகாமல் 

மாலா டூனொடு சேர்த்தி தம்பெற 
நானா வேதம சாத்தி ரஞ்சொலும் 
வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர ...... தவிசூடே 

மாதா நாதனும் வீற்றி ருந்திடும் 
வீடே மூணொளி காட்டி சந்திர 
வாகார் தேனமு தூட்டி யென்றனை ...... யுடனாள்வாய் 

சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி 
மாதா ராபகல் காத்த மைந்தனை 
சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ ...... னெமையாளுந் 

தூயாள் மூவரை நாட்டு மெந்தையர் 
வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர்
தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ ...... ளருள்பாலா 

வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக 
மூடார் சூரரை வாட்டி யந்தகன் 
வீடு டேவிய காத்தி ரம்பரி ...... மயில்வாழ்வே 

வேதா நால்தலை சீக்கொ ளும்படி 
கோலா காலம தாட்டு மந்திர 
வேலா மால்மக ளார்க்கி ரங்கிய ...... பெருமாளே. 
பாடல் 784 
தான தானதன தானதன தானதன 
தான தானதன தானதன தானதன 
தான தானதன தானதன தானதன ...... தனதான 


மேக வார்குழல தாடதன பாரமிசை 
யார மாடகுழை யாடவிழி யாடபொறி 
மேனி வாசனைகள் வீச அல்குல் மோதிபரி ...... மளமேற 

மீனு லாடையிடை யாடமயில் போலநடை 
யோல மோலமென பாதமணி நூபுரமு 
மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் ...... முழவோசை 

ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு 
வோரை வாருமென வேசரச மோடுருகி 
ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ ...... டதிபார 

ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு 
வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட 
ரான சூலைபல நோய்கள்கட லாடியுட ...... லுழல்வேனோ 

நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி 
நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை 
நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் ...... முநிவோர்கள் 

நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை 
வேத கீதவொலி பூரையிது பூரையென 
நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட ...... விடும்வேலா 

தோகை மாதுகுற மாதமுத மாதுவினல் 
தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக 
சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை ...... புணர்வோனே 

தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு 
மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர் 
சூழு காவிரியும் வேளூர்முரு காவமரர் ...... பெருமாளே.