உயர் பிறப்பு

bookmark

கடலுலகில் வாழும்உயிர் எழுபிறப் பினுள்மிக்க 
      காட்சிபெறு நரசன் மமாய்க் 
கருதப் பிறத்தலரி ததினும்உயர் சாதியிற் 
      கற்புவழி வருதல் அரிது; 
வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது 
      வருதலது தனினும் அரிது; 
வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்றெண்ணி 
      மாசில்வழி நிற்றல் அரிது; 
நெடியதன வானாதல் அரிததின் இரக்கம்உள 
      நெஞ்சினோன் ஆதல் அரிது; 
நேசமுடன் உன்பதத் தன்பனாய் வருதல்இந் 
      நீள்நிலத் ததினும் அரிதாம்; 
அடியவர்க் கமுதமே! மோழைபூ பதிபெற்ற 
      அதிபன்எம தருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
------------