கவி வணக்கம்

மலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகை
மருக்கொழுந் துயர்கூ விளம்
மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூட
மணிமுடி தனிற்பொ றுத்தே
சிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகு
செம்முள்ளி மலர்சூ டவே
சித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகா
தேவதே வா!தெ ரிந்தே
கலைவலா ருரைக்குநன் கவியொடம் பலவாண
கவிராயன் ஆகு மென்புன்
கவியையும் சூடியே மனமகிழ்ந் திடுவதுன்
கடன் ஆகும் அடல்நா கமும்
அலைபெருகு கங்கையும் செழுமதிய மும்புனையும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!