பதர்

மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
வாயிலா தவனொரு பதர்;
வாள்பிடித் தெதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்
மனக்கோழை தானொரு பதர்;
ஏறா வழக்குரைத் தனைவருஞ் சீசியென்
றிகழநிற் பானொரு பதர்;
இல்லாள் புறஞ்செலச் சம்மதித்தவளோ
டிணங்கிவாழ் பவனொரு பதர்;
வேறொருவர் மெச்சாது தன்னையே தான்மெச்சி
வீண்பேசு வானொரு பதர்;
வேசையர்க ளாசைகொண் டுள்ளளவும் மனையாளை
விட்டுவிடு வானொரு பதர்;
ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள்செய்
அமல! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
------------