பதர்

bookmark

மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே 
      வாயிலா தவனொரு பதர்; 
வாள்பிடித் தெதிரிவரின் ஓடிப் பதுங்கிடும் 
      மனக்கோழை தானொரு பதர்; 
ஏறா வழக்குரைத் தனைவருஞ் சீசியென் 
      றிகழநிற் பானொரு பதர்; 
இல்லாள் புறஞ்செலச் சம்மதித்தவளோ 
      டிணங்கிவாழ் பவனொரு பதர்; 
வேறொருவர் மெச்சாது தன்னையே தான்மெச்சி 
      வீண்பேசு வானொரு பதர்; 
வேசையர்க ளாசைகொண் டுள்ளளவும் மனையாளை 
      விட்டுவிடு வானொரு பதர்; 
ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள்செய் 
      அமல! எமதருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
------------