
விவசாயியின் கழுதை

ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தாரு, அவருக்கு திடீர்னு பணக்கஷ்டம் வந்துச்சு, உடனே தன்னோட கழுதையை வித்து அந்த பணத்தை வச்சு பிரச்னையை சமாளிக்கலாம்னு முடிவு பண்ணுனாரு.
தன்னோட மகன கூட்டிகிட்டு பக்கத்துக்கு சந்தைக்கு நடந்து போனாரு அந்த விவசாயி, அப்படி போகும்போது ஒருத்தர் அவுங்கல பாத்து சொன்னாரு, கழுதை சும்மாதான நடத்துவது, உங்க ரெண்டு பேருல யாராவது அதுமேல உக்காந்துட்டு போகலாம்லனு சொன்னாரு
உடனே தன்னோட மகன அந்த கழுத மேல ஏத்தி விட்டுட்டு கூட சேர்ந்து நடந்தார் விவசாயி
கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அங்க வந்த இன்னொருத்தரு, அட பாவி சின்ன பயலே வயசான உங்க அப்பாவ நடக்க விட்டுட்டு நீ உக்காந்துகிட்டு வரியேனு கேட்டாரு
உடனே விவசாயி சரினு தான் உக்காந்துக்கிட்டு அவரோட மகன கூட நடக்க சொன்னாரு,
கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம், ஒரு பாட்டி வந்து நீ எல்லாம் பெரிய மனுசனா,சின்ன பையன நடக்க விட்டு நீ உக்காந்துட்டு வரியேனு சொன்னாங்க .
உடனே தன்னோட மகனையும் கூட ஏத்திக்கிட்டு ஒண்ணா பயணம் செஞ்சாரு அவரு,
அப்ப அந்த வந்த முதியவர் ஒருவர் அட கொடுமைக்காரர்களா இப்படி ரெண்டு பேரு அந்த குதிரைமேல உக்காந்து இருக்கீங்களே உங்களுக்கு இரக்கம் இல்லையானு கேட்டாரு
உடனே ரெண்டு பேரும் கீழ இறங்கிக்கிட்டு, இனி என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க, இனி இந்த கழுதைய நாம தூக்கிட்டு நடப்போம்னு, ஒரு குச்சியை கழுதையோட கால்களுக்கு நடுவுல கட்டி தலைகீழா தூக்கிட்டு நடந்தாங்க,
அப்ப அங்க ஒரு ஆறு குறிக்கிட்டுச்சு, ஆத்த கடக்கறப்ப கழுத்த பயத்துல துள்ளி குதிச்சது, உடனே பிடிய விட்டான் அந்த பையன், அப்ப அந்த கழுத்த ஆத்தோட போயிருச்சு
அடுத்தவங்க சொல்றத எல்லாத்தையும் கேட்ட அவங்களுக்கு, கழுதையும் போயிருச்சு, அத வித்து பணம் கிடைக்க வழியும் இல்லாம போயிருச்சு