செய்ய வேண்டும்

வாலிபந் தனில்வித்தை கற்க வேண்டும்;கற்ற
வழியிலே நிற்க வேண்டும்;
வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்;தேடி
வளரறஞ் செய்ய வேண்டும்;
சீலம்உடை யோர்களைச் சேரவேண் டும்;பிரிதல்
செய்யா திருக்க வேண்டும்
செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண் டும்;கொண்டு
தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை பலதருமம் நாட்டவேண் டும்;நாட்டி
நன்றாய் நடத்த வேண்டும்;
நம்பன் இணை யடிபூசை பண்ணவேண் டும்;பண்ணி
னாலும்மிகு பத்தி வேண்டும்
ஆலமமர் கண்டனே! பூதியணி முண்டனே!
அனக! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
-----------