
ஓநாயும் கொக்கும்

காட்டுல ஒரு ஓநாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு, அந்த ஓநாய் ஒருநாள் சாப்டுகிட்டு இருந்துச்சு
அப்ப திடீர்னு ஒரு எலும்பு அதோட தொண்டைல சிக்கிக்கிச்சு, அதனால ஓநாய்க்கு ஒரே வலி எடுத்துச்சு
அந்த காட்டுல இருக்குற எல்லா மிருகத்து கிட்டயும் போய் உதவி கேட்டுச்சு, அந்த ஓநாய்
ஓநாயோட குணத்த தெரிஞ்சுக்கிட்ட விலங்குகள் எல்லாம் எங்களால முடியாதுன்னு சொல்லிட்டு போயிடுச்சுங்க
அப்ப அங்க ஒரு கொக்கு வந்துச்சு, அப்ப ஓநாய் கேட்டுச்சு, கொக்காரே கொக்காரே எனக்கு உதவு பண்ணுங்க, என்னோட தொண்டைல இருந்து எழும்ப எடுத்து என்ன காப்பாத்துங்கனு கேட்டுச்சு
ஆனா அந்த கொக்கு தனக்கு ஆபத்து வந்துடும்னு தயங்குச்சு
ஓநாய் சொல்லுச்சு நீங்க எனக்கு உதவுனீங்கன்னா உங்க வாழ்க்கையிலயே பெருசா நினைக்கிற பரிசு நான் தருவேன்னு சொல்லுச்சு
உடனே அந்த கொக்கு தன்னோட நீண்ட மூக்க ஓநாயோட தொண்டைக்குள்ள விட்டு அந்த எழும்ப எடுத்துச்சு
உடனே அந்த ஓநாய் கொக்குக்கு நன்றி சொல்லுச்சு, அதுக்கு அந்த கொக்கு கேட்டுச்சு எனக்கு ஏதோ பரிசு தரேன்னு சொன்னீங்களே அது எங்கன்னு கேட்டுச்சு
நீங்க வாழ்க்கைல அதிகமா நேசிக்கிறது உங்க உயிர்தான், நீங்க என்னோட வாய்க்குள்ள மூக்க விட்டப்ப உங்கள கடிக்காம இருந்தேன் பாருங்க அதுதான் நான் உங்களுக்கு கொடுத்த பரிசுன்னு சொல்லுச்சு
ஓநாயோட பேச்ச கேட்டு ஏமாந்துட்டமேன்னு நினைச்சது அந்த கொக்கு, இருந்தாலும் ஒரு உயிர காப்பாத்துன திருப்தில பறந்து போச்சு அந்த அந்த கொக்கு