மேன்மேல் உயர்ச்சி

bookmark

தன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன் 
      சாமர்த்தியம் உளபுருடன் ஆம் 
சந்ததம் பதின்மரைக் காப்பாற்று வோன்மிக்க 
      தரணிபுகழ் தருதேவன் ஆம்.
பொன்மட்டி லாமலீந் தொருநூறு பேரைப் 
      புரப்பவன் பொருவி லிந்த்ரன், 
புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று 
      புண்யவா னேபிரமன் ஆம் 
நன்மைதரு பதினா யிரம்பேர் தமைக்காத்து 
      ரட்சிப்ப வன்செங் கண்மால், 
நாளுமிவன் மேலதிகம் ஆகுவெகு பேர்க்குதவு
      நரனே மகாதே வன் ஆம், 
அன்மட்டு வார்குழலி பாகனே! ஏகனே! 
      அண்ணல்எம தருமை மதவேள் 
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
      அறப்பளீ சுரதே வனே!
-----------