செயற்கருஞ் செயல்

நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!
நெருப்பைநீர் போற்செய் யலாம்!
நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!
நீள்அர வினைப்பூ ணலாம்!
பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்
பட்சமுட னேஉண்ண லாம்!
பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்
பாவைபே சப்பண் ணலாம்!
ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்
எடுக்கலாம்! புத்தி சற்றும்
இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே
எவருக்கும் முடியா துகாண்!
ஆர்மேவு கொன்றைபுனை வேணியா! சுரர்பரவும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
----------