நல்லோர் - 2

bookmark

அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும் 
      அவனே மகாபுரு டனாம்; 
அஞ்சாமல் எதுவரினும் எதுபோ கினும்சித்தம் 
      அசைவிலன் மகாதீ ரனாம்; 
தொடுத்தொன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற 
      தோன்றலே மகரா சனாம்; 
தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத 
      துரையே மகாமே ருவாம்! 
அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த் திரட்சிக்கும் 
      அவனே மகாதியா கியாம்; 
அவரவர் தராதரம் அறிந்துமரி யாதைசெயும் 
      அவனே மகாஉசி தன்ஆம்;
அடர்க்கின்ற முத்தலைச் சூலனே! லோலனே! 
      அமலனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
-----------