நல்லோர் - 2

அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்
அவனே மகாபுரு டனாம்;
அஞ்சாமல் எதுவரினும் எதுபோ கினும்சித்தம்
அசைவிலன் மகாதீ ரனாம்;
தொடுத்தொன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற
தோன்றலே மகரா சனாம்;
தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத
துரையே மகாமே ருவாம்!
அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த் திரட்சிக்கும்
அவனே மகாதியா கியாம்;
அவரவர் தராதரம் அறிந்துமரி யாதைசெயும்
அவனே மகாஉசி தன்ஆம்;
அடர்க்கின்ற முத்தலைச் சூலனே! லோலனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
-----------