இல்லை

காமிக்கு முறையில்லை; வேசைக்கு நாண்இல்லை;
கயவர்க்கு மேன்மை யில்லை;
கன்னம்இடு கள்வருக் கிருளில்லை; விபசார
கன்னியர்க் காணை யில்லை;
தாமெனும் மயக்கறுத் தோங்குபெரி யோர்க்குவரு
சாதிகுலம்என்ப தில்லை;
தாட்சணியம் உடையபேர்க் கிகலில்லை; எங்குமொரு
சார்பிலார்க் கிடம தில்லை;
பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான
புகழென்ப தொன்று மில்லை;
புலையர்க்கு நிசமில்லை; கைப்பொருள் இலாததோர்
புருடருக் கொன்றும் இல்லை;
யாமினி தனக்கு நிகர் கந்தரத் திறைவனே
அன்புடைய அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
-----------