நிலையாமை

bookmark

காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும் 
      காட்டில்ஆற் றின்பெ ருக்காம்! 
கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம் 
      கானல்காட் டும்ப்ர வாகம்! 
மேயபுய பலவலிமை இளமையழ கிவையெலாம் 
      வெயில்மஞ்சள்! உயிர்தா னுமே, 
வெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி, 
      வீண்பொழுது போக்காமலே 
நேயமுட னேதெளிந் தன்பொடுன் பாதத்தில் 
      நினைவுவைத் திருபோ தினும் 
நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண் டர்ச்சிக்க 
      நிமலனே! அருள்புரி குவாய் 
ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே! 
      அண்ணல்எம தருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
-----------