இல்லாளின் சிறப்பு

bookmark

கணவனுக் கினியளாய், ம்ருதுபாஷி யாய், மிக்க 
      கமலைநிகர் ரூப வதியாய்க், 
காய்சினம் இலாளுமாய், நோய்பழி யிலாததோர் 
      கால்வழியில் வந்த வளுமாய், 
மணமிக்க நாணம்மடம் அச்சம் பயிர்ப்பென்ன 
      வரும்இனிய மார்க்க வதியாய், 
மாமிமா மற்கிதம் செய்பவளு மாய், வாசல் 
      வருவிருந் தோம்பு பவளாய்,
இணையில்மகிழ் நன்சொல்வழி நிற்பவளு மாய்வந்தி
      என்பெயர் இலாத வளுமாய், 
இரதியென வேலீலை புரிபவளு மாய்ப்பிறர்தம் 
      இல்வழி செலாத வளுமாய், 
அணியிழை யொருத்தியுண் டாயினவள் கற்புடையள்
      ஆகும்;எம தருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
------------