
உதவி கேட்ட ஓநாய்

ஒரு காட்டு பகுதியில ஒரு ஓநாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு
தினமும் வேட்டைக்குப்போய் காட்டு மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டு வந்துச்சு அந்த ஓநாய்
ஒருநாள் காட்டுப்பகுதியில் வேட்டைக்குப்போன ஓநாய் ஒரு கரடிகூட சண்டைபோட்டு ரொம்ப காயம்பட்டுடுச்சு
அதனால் நடக்கவே முடியாத அளவுக்கு காயம் அதிகமா இருந்துச்சு,அதனால அந்த கட்டுக்குள்ளயே பசியும் பட்னியுமா கிடந்துச்சு ஓநாய்
ஒருநாள் ஒரு ஆட்டு கூட்டம் அந்த பக்கமா வந்துச்சு , உடனே ஒரு ஆடுகிட்ட எனக்கு கொஞ்சம் தண்ணி கொடுக்குறியா அப்பத்தான் என்னால வேட்டையாட போகமுடியும்னு சொல்லுச்சு அந்த ஓநாய்
இத கேட்ட புத்திசாலியான ஆடு சொல்லுச்சு ,உனக்கு வேட்டையாடுற தெம்பு இருந்துச்சுன்னா இந்நேரம் என்ன கொன்னுருப்ப ,உனக்கு உதவி செஞ்சாலும் உனக்கு தெம்பு வந்ததும் என்னதான் முதல்ல கொள்ளுவ அதனால என்ன மன்னிச்சிடுனு சொல்லிட்டு
தன்னோட கூட்டத்தோட சேந்து போய்டுச்சு ஆடு .