திருமகள் இருப்பிடம்

நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,
நாகரிகர் மாமனை யிலே,
நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,
நறைகொண்ட பைந்துள விலே,
கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,
கல்யாண வாயில் தனிலே,
கடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,
கதிபெறு விளக்க தனிலே,
பொற்புடைய சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே
பொய்யாத பேர்பா லிலே,
பூந்தடந் தன்னிலே, பாற்குடத் திடையிலே
போதகத் தின்சிர சிலே
அற்பெருங் கோதைமலர் மங்கைவாழ் இடமென்பர்
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
----------