மூதேவி இருப்பிடம்

bookmark

மிதம்இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும், 
      மிகுபாடை யோ ரிடத்தும், 
மெய்யொன் றிலாமலே பொய்பேசி யேதிரியும் 
      மிக்கபா தகரிடத்தும், 
கதியொன்றும் இலர்போல மலினம்கொ ளும்பழைய 
      கந்தையணி வோரி டத்தும் 
கடிநா யெனச்சீறி எவரையும் சேர்க்காத 
      கன்னிவாழ் மனைய கத்தும், 
ததிசேர் கடத்திலும், கர்த்தபத் திடையிலும், 
      சார்ந்தஆட் டின்தி ரளிலும் 
சாம்பிண முகத்திலும் இவையெலாம் கவலைபுரி 
      தவ்வைவாழ் இடமென்பர் காண்!
அதிரூப மலைமங்கை நேசனே! மோழைதரும் 
      அழகன்எம தருமைமதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
-----------