குறைந்தாலும் பயன்படல்

bookmark

தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும் 
      சார்மணம் பழுதா குமோ! 
தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டு 
      சாரமது ரங்கு றையுமோ? 
நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின் 
      நீள்குணம் மழுங்கி விடுமோ? 
நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின் 
      நிறையுமாற் றுக்கு றையுமோ? 
கறைபட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு 
      கதிர்மதி கனம்போ குமோ? 
கற்றபெரி யோர்மகிமை அற்பர் அறிகிலரேனும் 
      காசினி தனிற்போ குமோ? 
அறிவுற்ற பேரைவிட் டகலாத மூர்த்தியே! 
      ஐயனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
-------------