ஒன்றுக்கொன்று ஆதரவு

வானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்
வாழ்வுதரும் உதவி புவனம்
வளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவி
வாழ்பெற் றிடுமன் னராம்!
தேனமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குதவி
சேர்ந்தகுடி படைவர்க் கம்ஆம்;
சேர்குடி படைக்குதவி விளைபயிர்! பயிர்க்குதவி
சீர்பெற வழக்கு மழையாம்!
மேனிமிர் மழைக்குதவி மடமாதர் கற்பொன்று;
வேந்தர்தம் நீதி யொன்று
வேதியர் ஒழுக்கம்ஒன் றிம்மூன்று மேயென்று
மிக்கபெரி யோர்உரை செய்வார்
ஆனமர் நெடுங்கொடி உயர்த்தனம் இறைவனே!
அதிபனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
----------