இதனை இதுகண்டு மகிழும்

bookmark

தந்தைதாய் மலர்முகம் கண்டுநின் றாலிப்ப 
      தவர்தந்த சந்ததி யதாம்! 
சந்த்ரோ தயம்கண்டு பூரிப்ப துயர்வாவி 
      தங்குபைங் குமுத மலராம்!
புந்திமகிழ் வாய்இரவி வருதல்கண் டகமகிழ்வ 
      பொங்குதா மரைமலர் களாம்! 
போதவும் புயல்கண்டு கண்களித் தேநடம் 
      புரிவது மயூர இனமாம்! 
சிந்தைமகிழ் வாய்உதவு தாதாவி னைக்கண்டு 
      சீர்பெறுவ திரவலர் குழாம் 
திகழ்நீதி மன்னரைக் கண்டுகளி கூர்வதிச் 
      செகம்எலாம் என்பர் கண்டாய்! 
அந்தியம் வான் அனைய செஞ்சடா டவியனே! 
      அமலனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
----------