ஆகாதவை

உள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசி
உறவாடும் உறவும் உறவோ?
உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோ
றுண்டவர்க் கன்னம் ஆமோ?
தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவரு
தக்கபயிர் பயிரா குமோ?
தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்
தானையும் தானை யாமோ?
விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வரு
விருப்பமும் விருப்ப மாமோ?
வெகுகடன் பட்டபேர் செய்கின்ற சீவனமும்
மிக்கசீ வனமா குமோ?
அள்ளா திருங்கருணை யாளனே! தேவர்தொழும்
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
-----------