நற்பண்புக்கு இடமிலார்

bookmark

வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டு 
      வெங்காஞ் சொறிப்பு தலிலே 
வீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும் 
      மேவுமோ? மேவா துபோல், 
குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க், 
      கூடவே இளமை உண்டாய்க், 
கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க 
      குவலயந் தனில்அ வர்க்கு, 
நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும் 
      நிதானமும் பெரியோர் கள்மேல் 
நேசமும் ஈகையும் இவையெலாம் கனவிலும் 
      நினைவிலும் வராது கண்டாய்; 
அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே! 
      அண்ணலே ! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
---------