இவர் இன்ன முறையர்

bookmark

தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்து 
      தான்முடிப் போன்த மையன்ஆம்; 
தன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன் 
      தாய்தந்தை யென்னல் ஆகும்; 
ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோ 
      துதவுவோன் இட்ட தெய்வம்; 
உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம் 
      உரைப்பவன் குருஎன் னல்ஆம்;
எந்நாளும் வரும்நன்மை தீமைதன தென்னவே 
      எண்ணிவரு வோன்பந் துஆம்; 
இருதயம் அறிந்துதன் சொற்படி நடக்குமவன் 
      எவன் எனினும் அவனே சுதன் 
அந்நார மும்பணியும் எந்நாளு மேபுனையும் 
      அண்ணலே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
--------