ஒழுகும் முறை

bookmark

மாதா பிதாவினுக் குள்ளன் புடன்கனிவு 
      மாறாத நல்லொ ழுக்கம்; 
மருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உள 
      வார்த்தைவழி பாட டக்கம்; 
காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன 
      காலத்தில் நயபா டணம்; 
கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம் 
      கருணைசேர் அருள்வி தானம்; 
நீதிபெறும் மன்னவ ரிடத்ததிக பயவினயம்; 
      நெறியுடைய பேர்க்கிங்கிதம்; 
நேயம்உள தமர்தமக் ககமகிழ் வுடன்பரிவு 
      நேரலர் இடத்தில் வைரம் 
ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்எம 
      தையனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
------------