குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்

துட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவர்;
சொல்லும்நற் கவியை மெச்சார்
துர்ச்சனர்க்க கம்மகிழ்ந்து பசரிப் பார்வரும்
தூயரைத் தள்ளிவிடுவார்
இட்டமுள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப்
பென்னிலோ போய்ப்பணிகுவார்;
ஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசை
என்னிலோ காலில் வீழ்வார்;
நட்டலா பங்களுக் குள்ளான பந்துவரின்
நன்றாக வேபே சிடார்;
நாளும்ஒப் பாரியாய் வந்தபுத் துறவுக்கு
நன்மைபல வேசெய் குவார்;
அட்டதிசை சூழ்புவியில் ஓங்குகலி மகிமைகாண்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
------------