குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்

bookmark

துட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவர்; 
      சொல்லும்நற் கவியை மெச்சார் 
துர்ச்சனர்க்க கம்மகிழ்ந்து பசரிப் பார்வரும் 
      தூயரைத் தள்ளிவிடுவார் 
இட்டமுள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப் 
      பென்னிலோ போய்ப்பணிகுவார்; 
ஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசை 
      என்னிலோ காலில் வீழ்வார்; 
நட்டலா பங்களுக் குள்ளான பந்துவரின் 
      நன்றாக வேபே சிடார்; 
நாளும்ஒப் பாரியாய் வந்தபுத் துறவுக்கு 
      நன்மைபல வேசெய் குவார்; 
அட்டதிசை சூழ்புவியில் ஓங்குகலி மகிமைகாண்! 
      அத்தனே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
------------